Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் பொக்கிஷம்: 90 வயதிலும் பஸ்சுல வந்து 20 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் பொன்னையா

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: திருச்செந்தூர் டாக்டர் பொன்னையா என்றாலே தூத்துக்குடி முழுக்க ஃபேமஸ். இவரை எல்லாரும் 20 ரூபாய் டாக்டர் என்றுதான் சொல்வார்களாம்.. ஆறுமுகநேரி மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த ஒரு உன்னத மனிதர் இவர்.. ஏழைகளின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர்.. இன்று டாக்டர் பொன்னையாவை இழந்து தூத்துக்குடி மக்கள் கலங்கி போயிருக்கிறார்கள்... !!

ஒரு டாக்டர் நோயை தீர்ப்பவராக மட்டும் இல்லாமல், மக்களின் மனங்களை வென்ற மாமனிதராக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர்தான் பொன்னையா.

Dr Ponniah Thiruchendur

திருச்செந்தூர் டாக்டர்

இவரது மருத்துவ பயணம் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ஒரு நேர்மையான அரசு அதிகாரியாக பணியாற்றிய போதே, ஏழை எளிய மக்களின் துயரைக் கண்டு கலங்கியவர்...

அதனால்தான் தன்னுடைய சொந்த ஊரான ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஒரு சிறிய கிளினிக்கை, மக்களுக்காகவே ஆரம்பித்தார்.. பல மருத்துவமனைகளில் சாதாரண காய்ச்சலுக்கே பெரும் செலவு பிடிக்கும் காலக்கட்டத்தில், பொன்னையா மட்டும் அன்று வெறும் 10 ரூபாய் வாங்கினாராம்.. பிறகு பல காலம் கழித்து 20 ரூபாய் வாங்கி உள்ளார்.. அந்த 20 ரூபாயுடன் அவரது பீஸ் நின்றுவிட்டது..

20 ரூபாய் டாக்டர் பொன்னையா

தரமான சிகிச்சையையும் அன்பான பேச்சையும் மருந்தாக தந்து மக்களின் மனங்களை வெல்வதில் உறுதியாக இருந்தவர் பொன்னையா...

அரசுப் பணியில் இருந்தபோதும்சரி, பணி மாறுதல்கள் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்றபோதும்சரி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தனது கிளினிக் வந்து மக்களுக்கு சேவையாற்ற அவர் தவறியதில்லை. பணி ஓய்வு என்பது மற்றவர்களுக்கு ஓய்வெடுப்பதற்கான காலம், ஆனால் பொன்னையாவுக்கு அது முழுநேர மக்கள் சேவைக்கான வாய்ப்பாக அமைந்தது.

பொக்கிஷம் - மனிதாபிமானி

திருநெல்வேலியில் வசித்து வந்த போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக தள்ளாத வயதிலும் தவறாமல் பஸ்ஸில் பயணம் செய்து ஆறுமுகநேரிக்கு வந்து நோயாளிகளை பார்த்துக் கனிவோடு அரவணைத்தார்.

மருத்துவ செலவுகள் விண்ணைத் தொடும் இன்றைய சூழலிலும் தன்னுடைய சேவையை கைவிடவில்லை.. ஒரு வாரத்திற்கு முன்புகூட நோயாளிகளுக்கு வெறும் 20 ரூபாய்க்குச் சிகிச்சை அளித்து வந்தாராம்... இவரை கண்டு வியக்காதவர்கள் யாருமேயில்லை.. இதனால் இந்த பகுதி மக்கள் அவரை 20 ரூபாய் டாக்டர், அன்பான டாக்டர் என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்...

பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், நோயாளியின் புன்னகையையே தனது ஊதியமாகக் கொண்டு செயல்பட்ட உன்னத ஆன்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.. இப்போது டாக்டர் பொன்னையாவுக்கு 90 வயதாகிறது.. வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

உருக்கம் - நெகிழ்ச்சி - நன்றி

அவரது மறைவுச் செய்தி கேட்ட ஆறுமுகநேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள், ஒட்டுமொத்தமாகத் திரண்டு அவர் 45 ஆண்டுகளாக சேவையாற்றிய அதே கிளினிக்கிற்கு வந்தனர். அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அவரது உடலைப் பார்த்து ஏழை எளிய மக்கள் கதறி அழுத காட்சி காண்போரை உருக்கமடைய செய்தது. மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மக்கள், பொன்னையாவின் குடும்பத்தினரிடம் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

"எங்கள் வீட்டில் ஒருவராகவே டாக்டர் பொன்னையா இருந்தார், இனி யாரை நம்பி நாங்கள் இருப்போம்?" என்று மக்கள் எழுப்பிய கேள்விகள் அனைவரின் கண்களையும் குளமாக்கியது.

டாக்டர் பொன்னையா எத்தகைய உயரிய நோக்கத்திற்காக இந்தக் கிளினிக்கைத் தொடங்கினாரோ, அதே சேவையை அவரது வாரிசுகளோ அல்லது உறவினர்களோ தொடர்ந்து நடத்திட வேண்டும் என மக்கள் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். ஒரு தலைசிறந்த டாக்டர் மறைந்தாலும், அவர் விதைத்த மனிதாபிமானம் இப்பகுதி மக்களின் இதயங்களில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது மட்டும் உறுதி...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+