நம்ம தூத்துக்குடி பசங்க.. மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா.. டிக்டாக் அட்டகாசம்.. தூக்கிய போலீஸ்
டிக்டாக் செய்த தூத்துக்குடி இளைஞர்களுக்கு நூதன தண்டன வழங்கப்பட்டது
Recommended Video
தூத்துக்குடி: "தூக்கிட்டானுங்க..ம்மா.. நம்ம தூத்துக்குடி பசங்க.. ரொம்ப மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா ரோடுதான்" என்று போலீஸ் ஜீப் மேலேயே ஏறி நின்று கொண்டு டிக்டாக் செய்த இளைஞர்களை, இன்று நிஜமாகவே தூத்துக்குடி ரோட்டில் நிற்க வைத்துவிட்டனர் நம் போலீசார்!
சில தினங்களுக்கு முன்பு ஒரு டிக்டாக் வீடியோ வெளியானது..அதில் தூத்துக்குடி இளைஞர்கள் 3 பேர் சம்பந்தப்பட்ட வீடியோ.. ஆயுதப்படை வளாகம் முன்பு நிறுத்தியிருந்த போலீஸ் ஜீப்பில் 3 பேருமே ஏறி நின்று கொண்டனர்.
"தூக்கிட்டானுங்க..ம்மா.. நம்ம தூத்துக்குடி பசங்க.. ரொம்ப மோசமானவனுங்க.. கோடு போட சொன்னா ரோடுதான்..பத்துபேரு சுத்தி வளைச்சாலும், எங்க மனம் குறைஞ்சதில்லை" என்ற பாடலுக்கு வாயசைத்து டான்ஸ் ஆடினார்கள்.

வீடியோ
2 பேர் டான்ஸ் ஆட.. ஒருவர் இதை வீடியோ எடுத்துள்ளார்.. இதனை சோஷியல் மீடியாவிலும் பதிவிட, மிக வைரலாகிவிட்டது. போலீஸ் ஜீப்பின் மீது ஏறி நின்று டிக்டாக் செய்த இளைஞர்கள் யார் என்ற விசாரணையை தென்பாகம் போலீசார் நடத்தினர்.

தண்டனை
அவர்கள் பின்னர் முனியசாமிபுரம், லெவஞ்சிபுரத்தை சேர்ந்த ஷேக்குவாரா, சீனு, கோகுலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது. 3 பேரையும் டிஎஸ்பி பிரகாஷ் ஸ்டேஷனுக்கு வரவழைத்தார்.. இப்படிதான் ஜீப் மேல ஏறி நின்று ஆடுவதா என்று கேட்டு.. அறிவுரையும் வழங்கினார்.. மேலும் இந்த தவறுக்கு ஒரு தண்டனையையும் தந்தார்.

விளக்கம்
தூத்துக்குடி மார்க்கெட் சிக்னலில் நின்று 8 நேரம் டிராபிக்கை சரி செய்யவேண்டும் என்று சொன்னார். காவல்துறை பணி எவ்வளவு சிரமமானது என்பதை இந்த இளைஞர்கள் உணர வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தண்டனை என்று விளக்கம் சொன்னார்கள்.

பாராட்டு
அதன்படியே 3 பேரும் மார்க்கெட் பகுதி சிக்னலில் நடுரோட்டில் 8 மணி நேரம் நின்று டிராபிக் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தண்டனையை வழங்கிய தூத்துக்குடி போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications