திருச்செந்தூரில் தரிசன முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீஸ்.. பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். கோவில் சிறந்த பரிகாரி ஸ்தலமாக விளங்கி வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் சண்முக விலாசம் மண்டபம் முன்பு அர்ச்சகர்கள் கோவில் பணியாளர்கள் காவலாளிகள் 10 வருடம் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக தரிசனத்திற்கு அனுமதிப்பதாக பல்வேறு புகார் எழுந்தது . இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற பரிகாரத் தலமாகவும் விளங்குவதால் விசேஷ நாட்களில் இங்கு கூட்டம் அலைமோதும். இதனால் ஏற்படும் நெரிசலைத் தாரகையாகக் கொண்டு நீண்டகாலமாக சில முறைகேடுகள் புகாராக எழுந்த வண்ணம் இருந்தன.

குறிப்பாக சண்முக விலாச மண்டபம் முன்பாக அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சில வழிகளில் பக்தர்களை முறைகேடாக அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தன. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்களைத் தவிக்கவிட்டு விட்டு பெரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறுக்கு வழியில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்பட்டது. இது நீண்டகாலமாக பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது.
அமைச்சரின் ரகசிய ஆய்வு தந்த திருப்பம்
சமீபத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் இந்த புகார்களை விசாரிக்கத் திருச்செந்தூரில் ரகசியமாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்த முறைகேடுகளை அவரே நேரில் பார்த்துக் கடும் அதிர்ச்சியடைந்தார். அர்ச்சகர் ஒருவர் நேரடியாகப் பணம் பெற்றுக்கொண்டு பக்தர்களைக் குறுக்கு வழியில் அழைத்துச் சென்றது கையும் களவுமாகப் பிடிபட்டார்.
இந்த ஆய்வின் விளைவாக உடனடியாக முறைகேட்டில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மற்றும் கோவில் காவலாளிகள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இனி முறைகேடுகளுக்கு இடமே இல்லை என்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் சண்முக விலாசம்
தற்போது சண்முக விலாச மண்டபம் மற்றும் முக்கிய வரிசைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு மொத்தம் 40 போலீசார் இரண்டு ஷிப்ட் அடிப்படையில் பணியமர்த்தப்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர். இதன் மூலம் இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடான தரிசன முறைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன.
முதியோர் தரிசன வரிசை மற்றும் 100 ரூபாய் சிறப்புத் தரிசன வரிசை ஆகியவற்றில் போலீசார் தீவிரமாகச் சோதனையிடுகின்றனர். உரிய அனுமதியின்றி எவரும் வரிசைக்குள் புகாதபடி போலீசார் தடுப்புகளை அமைத்துக் கண்காணித்து வருகின்றனார். இதனால் வரிசையில் நிற்கும் சாமானிய பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி முருகனைத் தரிசிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய போலீஸ் பாதுகாப்பு முறையால் தரிசன வரிசையில் ஏற்படும் குழப்பங்கள் நீங்கியுள்ளன. "காசு கொடுத்தால் முன்னால் செல்லலாம்" என்ற நிலை மாறி இப்போது சமமான வாய்ப்பு கிடைப்பதாக பக்தர்கள் மகிழ்ச்சித் தெரிவிக்கின்றனர். அரசின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக














Click it and Unblock the Notifications