ஜூலை 7 ல் திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்.. யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு ஜூலை 7 ம் தேதி காலை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. உள்ளது. இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் தான் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவிலில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டது. இந்த பணி சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்துள்ளது.
இதையடுத்து ஜூலை 7 ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி நாளை காலை முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளது.
12 கால யாகசாலை பூஜை நடைபெறுவதற்காக கோவிலின் மேற்கு கோபுரம் பகுதியில் 8 ஆயிரம் சதுர அடியில் 76 வேள்வி குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 40 நாட்களாக நடந்து வந்த பணிகள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாளை முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.
முன்னதாக இன்று கோவில் வளாகத்தில் வாஸ்து சாந்தி பூஜை நடந்தது.
இதற்காக கோவிலில் வாஸ்து சாந்தி படம் வரையப்பட்டு அந்த படத்திற்கு பூ தூவி சிறப்பு வழிபாடு நடந்தது. அதைத் தொடர்ந்து அந்த படத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின் யாகவேள்வி வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
அதைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு, தான்ய வழிபாடு, வேள்விச் சாலை தூய்மை, காப்பு வேள்வி, நில வேள்வி, நிலத் திருக்குட வழிபாடு, தூய மீட்புச் சடங்கு ஆகியவை நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் கும்பாபிஷேகம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கலாம் என்பதால் சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications