பைக் மீது வேன் மோதி விபத்து.. உயிருடன் எரிந்து பலியான 2 இளைஞர்கள்.. மிரண்டு ஓடிய மக்கள்!
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சாமிநாதன். இவர் தனது இருச்சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் சேர்ந்து ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள புதுக்குடி அருகே எதிரே வந்த வேன் மோதியதில் இருச்சக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே விழுந்து தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து இளைஞர்கள் எழுவதற்குள் மளமளவென இரண்டு இளைஞர்களையும் பற்றியது தீ.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு இளைஞர்களும் தீயில் கருகி உயிரிழந்தனர். இது குறித்து ஶ்ரீவைகுண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் திருநெல்வேலி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தைக் கண்டு இளைஞர்களை காப்பாற்ற சென்ற மக்கள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்ததால் மிரண்டு ஓடினர்.












Click it and Unblock the Notifications