வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்
ஜோலார்பேட்டை.. ரயில் வேகன்களில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக போனது
Recommended Video
வேலூர்: "குடிக்க கூட எங்களுக்கு தண்ணியில்லை.. ஆனா இவ்ளோ தண்ணி இப்படி அநியாயத்துக்கு வீணா போகுதே" என்று பொதுமக்கள் வயித்தெரிச்சலுடன் சொல்கிறார்கள்.
சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்து அதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கியது. இதற்காக அதிகாரிகள் 3 கட்டமாக ஆய்வும் அங்கு நடத்தினர்.
இதற்காக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அந்தசமயத்தில் ஏதோ கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறியது. ஆனால், 2 மணிநேரம் போராடி அது சீர் செய்யப்பட்டது. அதன்பிறகு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

அறிவுரை
இதையடுத்து, நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர். அப்போது ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர்.

சென்னை
எப்படியும் இன்று மதியம் சென்னைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டேங்கர் லாரிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அளவுக்கு அதிகமாக தண்ணீரை ஏற்றியிருந்தது தெரியவந்தது.

சோதனை
50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும் டேங்கரில் ஏற்றுமாறு அதிகாரிகள் சொல்லி உள்ள நிலையில், 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஏற்றி வைத்துள்ளனர். பிறகு அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு டேங்கரில் இருந்தும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தண்டவாளம்
கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் தண்ணீர் அப்படியே அப்படியே தண்டவாளங்களில் கொட்டப்பட்டது. ஏற்கனவே குடிநீர் இல்லை என்று மறியல் செய்த பொதுமக்களில் சிலர் இதை பார்த்து மனம் பதறியவாறே சென்றனர். எனினும் இன்று இரவுக்குள் சென்னைக்கு தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications