வயிறெல்லாம் எரியுதுங்க.. வீணாக திறந்து விடப்பட்ட 10 லட்சம் லிட்டர் குடிநீர்.. ஜோலார்பேட்டை பரிதாபம்
ஜோலார்பேட்டை.. ரயில் வேகன்களில் இருந்து 10 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக போனது
Recommended Video
வேலூர்: "குடிக்க கூட எங்களுக்கு தண்ணியில்லை.. ஆனா இவ்ளோ தண்ணி இப்படி அநியாயத்துக்கு வீணா போகுதே" என்று பொதுமக்கள் வயித்தெரிச்சலுடன் சொல்கிறார்கள்.
சென்னைக்கு தண்ணீர் பஞ்சம் தீர்ப்பதற்காக ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு முடிவு செய்து அதற்காக ரூ.65 கோடி நிதியும் ஒதுக்கியது. இதற்காக அதிகாரிகள் 3 கட்டமாக ஆய்வும் அங்கு நடத்தினர்.
இதற்காக சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. அந்தசமயத்தில் ஏதோ கசிவு ஏற்பட்டதால் தண்ணீர் வெளியேறியது. ஆனால், 2 மணிநேரம் போராடி அது சீர் செய்யப்பட்டது. அதன்பிறகு சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது.

அறிவுரை
இதையடுத்து, நேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர். அப்போது ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர்.

சென்னை
எப்படியும் இன்று மதியம் சென்னைக்கு தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டேங்கர் லாரிகளை அதிகாரிகள் சோதனையிட்டபோது, அளவுக்கு அதிகமாக தண்ணீரை ஏற்றியிருந்தது தெரியவந்தது.

சோதனை
50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் மட்டும் டேங்கரில் ஏற்றுமாறு அதிகாரிகள் சொல்லி உள்ள நிலையில், 70 ஆயிரம் லிட்டர் தண்ணீரை ஏற்றி வைத்துள்ளனர். பிறகு அதிகாரிகளின் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு டேங்கரில் இருந்தும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தண்டவாளம்
கிட்டத்தட்ட 10 லட்சம் லிட்டர் தண்ணீர் அப்படியே அப்படியே தண்டவாளங்களில் கொட்டப்பட்டது. ஏற்கனவே குடிநீர் இல்லை என்று மறியல் செய்த பொதுமக்களில் சிலர் இதை பார்த்து மனம் பதறியவாறே சென்றனர். எனினும் இன்று இரவுக்குள் சென்னைக்கு தண்ணீர் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications