அம்மா குளிப்பதை வீடியோ எடுத்து.. மகளை மிரட்டி.. கூலித் தொழிலாளியின் அக்கிரமம்.. வேலூர் ஷாக்!
தாய், மகளை 6 வருடமாக சீரழித்துள்ளான் ஒரு காமுகன்
வேலூர்: அம்மா குளிப்பதை வீடியோ எடுத்து வைத்துகொண்டு, மகளையும் சீரழித்து வந்துள்ளார் 50 வயது கூலி தொழிலாளி.. இப்படி ஒரு அக்கிரமம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த பெண் அவர்.. 50 வயதாகிறது.. கணவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்.. இவர்களுக்கு 2 பெண்கள் உள்ளனர்.. 2 பேருமே நர்ஸ் ஆக உள்ளனர்.. சென்னையில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்கள்..

குடியாத்தத்தில் இவர்களின் வீட்டுக்கு பக்கத்திலேயே வசிப்பவர் யுவராஜ்.. 50 வயதாகிறது.. அவர் ஒரு கூலித்தொழிலாளி.. கல்யாணமாகி 4 பிள்ளைகள் உள்ளனர்.. நான்குமே பெண் குழந்தைகள்.
இந்நிலையில் ஒருநாள், விதவை பெண் குளிப்பதை, யுவராஜ் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்து கொண்டார்.. பிறகு அந்த வீடியோவை கொண்டு போய், தாய் - மற்றும் முதல் மகளிடம் காட்டி, சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவதாக மிரட்டி உள்ளார். இதை வைத்து, தாய், மகள் இருவரையும் 6 வருஷமாக மிரட்டி பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.
அடிக்கடி மிரட்டி பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.பிறகு அதையும் போனில் வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு, 2வது மகளிடம் காண்பித்து, அவரையும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த பெண் உஷாராகிவிட்டார்.. உடனே இதை பற்றி தன் அப்பாவிடம் சொல்லி உள்ளார்.. அதை கேட்டு ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் யுவராஜ் வீட்டுக்கு சென்று, நடந்தது குறித்து தட்டிக் கேட்டுள்ளார்..
அப்போது நடந்த தகராறில் ராணுவ வீரர், இரும்பு கம்பியால் யுவராஜை தாக்கி உள்ளார்.. பதிலுக்கு யுவராஜும் ராணுவ வீரரை கத்தியால் தாக்கி உள்ளார். இறுதியில், இது குறித்து குடியாத்தம் மகளிர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து யுவராஜை கைது செய்தனர்... இது தொடர்பாக இரு தரப்பிலும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications