எது இன்று உன்னுடையதோ.. அது நாளை வேறொருவருடையது.. தினகரனுக்கு கனகச்சிதமாக பொருந்திய கீதாசாரம்
வேலூர்: வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பரிசுப் பெட்டி சின்னம் சுயேச்சைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிடாமல் டிடிவி தினகரன் குழப்பத்தை தவிர்த்தார்.
ஜெயலலிதாவின் ஆர் கே நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை ஓரங்கட்டிவிட்டு குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதையடுத்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை தொடங்கினார்.

சின்னம்
இந்த கட்சியானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது அமமுக பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் பொதுச் சின்னத்தை வழங்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி
இதையடுத்து அமமுகவுக்கு பொதுச் சின்னத்தை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அமமுகவுக்கு பரிசு பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த சின்னத்தில் போட்டியிட்ட அமமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் வேலூருக்கு நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தலில்
கட்சியை பதிவு செய்யும் பணிகள் நடந்து வருவதாலும் நிரந்தர சின்னம் இல்லாததாலும் வேலூர் தேர்தலில் போட்டியிடவில்லை என தினகரன் அறிவித்தார். இதனால் வேலூரில் மும்முனை போட்டி நிலவுகிறது. 18 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 28 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

வேறு சின்னம்
இந்த நிலையில் 18 சுயேச்சைகளுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. இதில் சுகுமார் என்ற சுயேட்சை வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டகத்தை ஒதுக்கியுள்ளது. தினகரன் போட்டியிட்டிருந்தால் அவருக்கு வேறு சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

கஷ்டம்
ஏற்கெனவே பரிசுப் பெட்டகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கவே தினகரன் படாதபாடு பட்டுவிட்டார். இந்த நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த தினகரன் நிறைய கஷ்டப்பட்டிருப்பார். தினகரனை பார்க்கும் போது எது இன்று உன்னுடையதோ, அது நாளை வேறொருவருடையது என்ற ஸ்ரீகிருஷ்ணரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications