அசையாமல் அமைதியாக நின்ற அரக்கோணம் கல்லூரி பேராசிரியர்.. ஆடிப்போன ரயில் என்ஜின் டிரைவர்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த தினகரன் என்பவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மகன், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். நன்றாக சென்ற இவர்களது வாழ்க்கையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு வினையாகிவிட்டது. வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி கடனை அடைத்த பேராசிரியர், கடைசியில் செய்த காரியம் ரயில் ஓட்டுநரையே ஆடிப்போக வைத்துள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சங்களை பறிகொடுப்போர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவறான முடிவெடுக்கிறார்கள். பலர் பணத்தை இழந்து, கடனை கட்ட முடியாமல் விதியை முடித்துக் கொள்கிறார்கள். அப்படித்தான் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பேராசிரியர் செய்திருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் தினகரனுக்கு 42 வயது ஆகிறது. இவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி இந்துமதி குருவராஜபேட்டையில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் மகள், 5 வயதில் மகன்கள் இருக்கிறார்கள்.
பேராசிரியர் தினகரனுக்கு ஆன்லைன் ரம்மி விளையாடும் பழக்கம் இருந்திருக்கிறது. இதனால் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்திருக்கிறாராம். இதில் அவர் ரூ.25 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இந்த கடனை வீட்டுக்கடன் மற்றும் நகைக்கடன் வாங்கி அடைத்திருக்கிறார்.
அது மட்டுமின்றி தெரிந்தவர்களிடமும் கடனாக பணத்தை வாங்கி மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். அந்த பணமும் போதாத நிலையில் கடன் செயலிகளில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் கல்லூரி நிர்வாகம் கடன் பிரச்சினையை தீர்த்து விட்டு வருமாறு கூறி அவரை தற்காலிகமாக பணியிலிருந்து நிறுத்திவிட்டது. ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகமும் அவரை பணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தியதால் விரக்தியடைந்த தினகரன் அரக்கோணம் அருகே சித்தேரி பகுதியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிரைவிட்டார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் என்ஜின் டிரைவர் இதுகுறித்து சித்தேரி ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் ரயில்வே போலீசாருக்கு தகவல் தந்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே போலீசார் பேராசிரியர் தினகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications