இது தான் வேலூர் மக்களின் பாசம்.. ஜோலார்பேட்டையில் மொழி தெரியாமல் தவித்த பீகார் காவலர் மகள்.. பாருங்க
வேலூர்: பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த ரியோ போர் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரரின் மகள் வீட்டில் சண்டை போட்டுவிட்டு, யாரிடமும் சொல்லாமல் ரயிலில் ஏறி ஜோலார்பேட்டைக்கு வந்துள்ளார். ஆனால் பீகார் போலீஸ்காரரின் மகள் மொழி தெரியாமல் தவித்துள்ளார். அவர் வீட்டை விட்டு ஓடிவந்ததை கண்டுபிடித்த பெண்கள், பாசத்துடன் மீட்டு உபசரித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மாணவியை அவரது பெற்றோருடன் பீகார் போலீசார் பீகாருக்கு அழைத்துச் சென்றனர்.
வந்தாரை வாழவைக்கும் ஊரு என்று தமிழ்நாட்டை சொல்லலாம். எந்த மதத்தைச் சேர்ந்தவர்களும், எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த பாகுபாடும் இன்றி வாழ முடியும்.. தமிழ்நாட்டிற்கு வடமாநிலத்தவர் முதலில் நுழையும் பகுதி என்றால் ஒன்று சென்னையாக இருக்கும்.. இல்லை என்றால் வேலூர் மாவட்டமாக இருக்கும்... ஜோலார்பேட்டை அல்லது காட்பாடியில் தான் பல வட மாநிலத்தவர்கள் நுழைந்து வருகிறார்கள். அப்படி வரும் பலர் பல மாவட்டங்களில் வேலைக்கு செல்கிறார்கள்.

இந்நிலையில் பீகார் தலைநகர் பாட்னாவை அடுத்த ரியோ போர் பகுதியை சேர்ந்த ஒரு போலீஸ்காரருக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவரது மகளான 17 வயது மாணவி அவர் வசிக்கும் பகுதியிலேயே பி.யூ.சி. 2-ம் ஆண்டு (பிளஸ் 2) படித்து வருகிறார். மாணவிக்கும் இவரது சகோதரருக்கும் அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரமும் சகோதரர்களுடன் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் கோபமடைந்த மாணவி, வீட்டில் இருந்த தனது ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து எரித்து விட்டார். பின்னர் அந்த வழியாக சென்ற ரயிலில் ஏறினார். அந்த ரயில் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்துள்ளார். பின்னர் எங்கு செல்வது என தெரியாமல் திரிந்த நிலையில், இடையம்பட்டி பகுதியில் சென்றபோது 2 பெண்கள் சாலையோரம் படுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் சென்று தானும் படுத்துக்கொள்வதாக பீகார் மாநில மொழியில் கேட்டிருக்கிறார். ஆனால் மொழி தெரியாமல் அங்கிருந்த பெண்கள் அருகில் உள்ளவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர் மாணவி என்பதும் பீகார் மாநிலத்தை சேர்ந்த போலீஸ்காரரின் மகள் என்பதும் அண்ணனுடன் சண்டை போட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியேறி இங்கு வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக போலீசார் அங்கு சென்று பீகார் மாணவியை மீட்டு விசாரணை மேற்கொண்டு, திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனத்தில் தங்க வைத்தனர். இதனையடுத்து போலீசார் பீகார் மாநிலத்தில் உள்ள நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அங்கு இந்த மாணவி மாயமானதாக புகார் அளிக்கப்பட்டு போலீசார் விசாரித்து வந்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோருடன் பீகார் மாநில நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேசன் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கீதா குமாரி மற்றும் போலீசார் நேற்று விமானம் மூலம் பெங்களூர் வந்து அங்கிருந்து ரயில் மூலம் ஜோலார்பேட்டை வந்தனர்.
அவர்களிடம் மாணவியை ஜோலார்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி மற்றும் போலீசார் ஒப்படைத்தனர். இதனை அடுத்து மாணவியை பெற்றோருடன் போலீசார் பெங்களூரு சென்று அங்கிருந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு சென்றனர். மொழி தெரியாமல் தவித்த பீகார் மாணவி குறித்து உரிய நேரத்தில் தகவல் அளித்த பெண்களை போலீசார் பாராட்டினார்கள்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications