குளிக்க போன ஐஸ்வர்யா.. தாலி கட்ட கொஞ்ச நேரம்தான்.. அப்படியே மாயமானதால் அதிர்ச்சி!
வேலூர் அருகே மணப்பெண் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
வேலூர்: குளிக்க போன கல்யாண பொண்ணு ஐஸ்வர்யாவை காணவில்லை.. தாலி கட்ட இருந்த கொஞ்ச நேரத்தில் மாயமானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் விநாயகம். 24 வயதாகிறது. இவருக்கும், வெள்ளைக்குட்டை எனும் கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் இரு வீட்டு பெரியவர்களும் கல்யாணம் நிச்சயம் செய்திருந்தனர். நேற்றுதான் கல்யாண நாள்.
குடியாத்தம் மேல்பட்டி ரோட்டில் உள்ள முருகர் கோயிலில் இந்த கல்யாணம் நடக்க இருந்தது. இதற்காக இரு தரப்பு வீட்டில் இருந்து பலரும் மண்டபத்தில் குவிந்து கிடந்தனர்.

மணமேடை
காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் முகூர்த்த நேரம் ஆரம்பமானது. மணமக்கள் அலங்காரத்துடன் மேடைக்கு வந்தனர்.. தொடர்ந்து நலுங்கு வைக்கும் சடங்குகள், மந்திரங்கள் விறுவிறுவென நடந்து கொண்டிருந்தன.

சட்டை
பிறகு மணமக்கள் முகூர்த்த வேட்டி, சேலையை மாற்றி வரும்படி அவரவர் அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மணமகன் முதல் ஆளாக வேட்டி-சட்டை அணிந்து கொண்டு வந்து மேடையில் உட்கார்ந்து விட்டார். ஆனால் சேலை மாற்றி வர சென்ற பொண்ணை காணோம். உட்கார்ந்து உட்கார்ந்து பார்த்த மணமக்கள் தரப்பினருக்கு லேசாக அள்ளு கிளம்பியது.

ஐஸ்வர்யா
அதனால் பெண்ணை கொஞ்சம் சீக்கிரம் கூட்டிட்டு வாங்க என்று ஐயர் சொல்லவும், மணமகள் அறைக்கும், பாத்ரூமிலும் சென்று குடும்பத்தினர் பார்த்தனர். கல்யாண பெண் ஐஸ்வர்யாவை காணவில்லை. போன் பண்ணினாலும் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது. அது கோயில் என்பதாலும், வேறு சில கல்யாணமும் அப்போது நடந்து கொண்டிருந்ததாலும் கூட்டம் வழிந்து காணப்பட்டது.

புகார்
அதில் ஐஸ்வர்யா தப்பி சென்றுவிட்டாரா என தெரியவில்லை, ஏன் தப்பி சென்றார் என்றும் தெரியவில்லை.
ஆனால் கல்யாணம் நின்று விட்டது. கண்ணீர், சோகத்துடன் காணப்பட்ட மணமகள் வீட்டார், குடியாத்தம் டவுன் போலீசார் புகார் தந்துள்ளனர். கல்யாண வீட்டில் குளிக்க சென்ற மணமகள் ஐஸ்வர்யா மாயமானது பெரிய பரபரப்பை தந்துள்ளது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications