வேலூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வேலூர் தேர்தல்.. குடியாத்தம் வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா உள்பட ரூ 3 லட்சம் பொருட்கள் திருட்டு

Google Oneindia Tamil News

குடியாத்தம்: வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ள குடியாத்தம் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் காந்தி நகர் பகுதியில் அரசு திருமகள் கல்லூரி வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் 11 கம்ப்யூட்டர்கள் கொண்டு ஸ்மார்ட் வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Computers and CCTV cameras are theft in Gudiyatham polling station

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல்யொட்டி, இப்பள்ளியில் 29, 30, 32 வார்டுகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

தயாராக இருங்க.. இந்த 2-ல் எதுவேணாலும் நடக்கும்.. எப்போதும் அழுது வடியும் குமாரசாமியின் பகீர் பேச்சு!தயாராக இருங்க.. இந்த 2-ல் எதுவேணாலும் நடக்கும்.. எப்போதும் அழுது வடியும் குமாரசாமியின் பகீர் பேச்சு!

இந்த நிலையில் நேற்று இரவு பள்ளியில் புகுந்த மர்ம கும்பல் ஸ்மார்ட் வகுப்பில் இருந்த 11 கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், போன் மற்றும் தேர்தல் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

தேர்தல் பணிக்காக இன்று காலை பள்ளிக்கு சென்ற அதிகாரிகள் வகுப்பு அறைகள் உடைக்கப்பட்டு கணினிகள், சிசிடிவி கேமராக்கள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Computers and CCTV cameras are theft in Gudiyatham polling station as polling for Vellore takes place tomorrrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X