வெல்ல முடியாதவர்களின் முட்டாள்தனமான தப்புக்கணக்கு: ரெய்டு குறித்து துரைமுருகன்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வெற்றி பெற முடியாதவர்கனின் தப்பு கணக்கு தான் இந்த முட்டாள் தனமான நடவடிக்கை என வருமான வரித்துறை சோதனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொருளாளா் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரி அலுவலங்களில், மூன்று நாட்கள் வருமான வரித்துறைச் சோதனை நடத்தியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

DMK treasurer duraimurugan told about income tax raid his house

வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக வேலூர் காட்பாடி இல்லத்தில் செய்தியாளர்களிடம் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் " வருமான வரி சோதனை முழுக் முழுக்க அரசியல். அரசியல் அரிச்சுவாடி தெரியாதவர்களால் நடத்தப்படுகிறது. வேலூர் மக்களவை தேர்தலையும், வேலூர் இடைத்தேர்தலையும் தடுக்கும முயற்சி தான் இந்த வருமான வரிசோதனை.

வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வாந்தார்கள். சோதனையில் ஒன்றும் இல்லை என்றவுடன் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இந்த சோதனையால் 3 நாட்கள் என்னை பிரச்சாரத்துக்கு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர்.

வருமான வரிசோதனையை நடத்தியது மத்திய, மாநில அரசுகள் தான். வெற்றி பெற முடியாதவர்கள் தப்பு கணக்கு தான் இது. முட்டாள் தனமான நடவடிக்கை. மக்கள் மனதில் என்ன மாற்றம் ஏற்படும் என்பது தெரியாமல் சோதனை நடத்துகிறார்கள்.. என்னை அடக்க நினைத்தாலும் தொண்டர்களின் அன்பு போதும். தலைவர் இல்லை என்றாலும், தளபதி அந்த இடத்தில் இருந்து எங்களை வழிநடத்துகிறார்" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+