Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திராவிடர் கழக துலாபாரம்! கி.வீரமணி எடைக்கு எடை பணக்கட்டு! உண்மைதான்! அசர வைத்த பெரியார் தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியில், திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் எடை எடைக்கு இணையாக பணக்கட்டுகள் விடுதலை நாளிதழ் சந்தவாக வழங்கபட்டது.

Recommended Video

    Veeramani | தராசு தட்டில் அமர்ந்திருந்த கி.வீரமணி *Politics | Oneindia Tamil

    திருப்பத்தூரில் மாவட்ட திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நடத்திய கலந்துரையாடல் கூட்டமும், திராவிட கழகத்தின் சார்பில் சந்தா வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான திராவிடர் கழக தொண்டர்கள், பல்வேறு அமைப்பினர், பெரியார் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     கி.வீரமணி

    கி.வீரமணி


    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழான விடுதலை நாளிதழுக்கு சந்தா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பேசிய வீரமணி, நீட் தேர்வை வைத்து மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை சிதைத்து வருகிறது. இதற்காக போராடும் ஒரே இயக்கம் திராவிட கழகம் தான் என்றார்.

     சந்தா பணம்

    சந்தா பணம்


    முன்னதாக விடுதலை நாளிதழுக்கு சந்தா பணம் நிகழ்ச்சிக்காக வந்த திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு அந்த அமைப்பின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத்தினர் சந்தா வழங்கும் நிகழ்ச்சிக்காக வித்தியாசமான ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    துலாபாரம்

    துலாபாரம்

    அதாவது கோவில்களில் துலாபாரம் எனப்படும் எடைக்கு எடை காணிக்கை வழங்குவதை போல விடுதலை நாளிதழுக்கு வீரமணியின் எடைக்கு எடை பணக்கட்டுகளை வழங்க முடிவு செய்து இருந்தனர். அதன்படி மேடை அருகே ஒரு பெரிய தராசு அமைக்கப்பட்டு ஒருபுறம் கி வீரமணி அமர வைக்கப்பட்டார். மறுபுறம் பத்து ரூபாய் இருபது ரூபாய், 50 ரூபாய் உள்ளிட்ட நோட்டு கட்டுகள் அடுத்தடுத்து அடுக்கி வைக்கப்பட்டு எடை பார்க்கப்பட்டது.

    எடைக்கு எடை பணம்

    எடைக்கு எடை பணம்

    சுமார் 20 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எடை சமமாக இருந்தது. அந்த சந்தா தொகை திராவிடர் கழக தலைவர் வீரமணியிடம் விடுதலை நாளிதலுக்கான சந்தா தொகையாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பத்தூரை பொறுத்தவரையில் திராவிட கழகத்தினர் சுமார் 60 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+