ஜோலார்பேட்டையிலிருந்து வந்தது முதல் ரயில் நீர்.. சென்னைவாசிகளின் இல்லம் தேடி வந்த காவிரி
Recommended Video
வேலூர்: ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் புறப்பட்ட ரயில் வில்லிவாக்கம் வந்தடைந்தது.. இந்த தண்ணீர் குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
சென்னையில் நிலவும் கடும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.65 கோடி நிதியினை அரசு ஒதுக்கியுது.

இதன்படி ஜோலார்பேட்டையில் இருந்து மேட்டுசக்கர குப்பத்தில்உள்ள தரை மட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து பார்சம்பேட்டை அருகே வரை 3.5 கிலோமீட்டர் தூரம் ராட்சத பைப் லைன் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் முழுவீச்சில் நடந்தது. நேற்று முன்தினம் சோதனை ஓட்டப்பட்டது. தண்ணீர் பார்சம்பேட்டைக்கு வெற்றிகரமாக வந்தது. அங்குகிருந்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள குழாய்கள் மூலம் ரயில்வே வேகன்களில் தண்ணீரை நிரப்பினர்.

தண்ணீர் நிரப்பட்ட வேகன்களை சோதித்த அதிகாரிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக வேகன்களில் முழுமையாக தண்ணீர் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து ஒவ்வொரு வேகன்களில் இருந்து சுமார் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரை குறைக்க உத்தரவிட்டனர். இதன்படி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மகேஷ் கொடியசைத்து குடிநீர் ரயிலை சென்னைக்கு இயக்கும் சேவையை தொடங்கிவைத்தார். வாழைத் தோரணங்கள், மலர் அலங்காரங்களுடன் பூஜைக்கு பிறகு குடிநீர் ரயில் புறப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு 2.50 லட்சம் லிட்டர் குடிநீருடன் காலை 7.20 மணி அளவில் புறப்பட்டது.


தற்போது வில்லிவாக்கம் வந்துள்ளது. இந்த நீர் அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்ப்படுகிறது. ஒருநாளைக்கு தற்போது ஒரு டிரிப் மட்டும் ரயில் நீர் சென்னைக்கு வந்துள்ளது. விரைவில் படிப்படியாக டிரிப்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளது.

-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
குடிநீர் விலை தாறுமாறு உயர்வு.. தமிழ்நாட்டில் 1 லி பாட்டில் ரூ.3, 20 லி கேன் ரூ.5 விலை உயர்வு! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல!












Click it and Unblock the Notifications