வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வு - ரிக்டர் அளவு கோலில் 3.5ஆக பதிவு
வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடரும் நில அதிர்வுகளால் வேலூர் மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களுக்குள் இரண்டு முறை நில அதிர்வுகள் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. லேசான நில அதிர்வுகள் என்பதால் பெரிய அளவில் உயிரிழப்பு போன்ற எதுவும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 3-வது முறையாக நில அதிர்வு தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3.14 மணியளவில் ரிக்டர் அளவு 3.5 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications