3 நாள் முகாம்.. களமிறங்கும் முதல்வர்.. முதல் நாளே ஸ்டாலினுடன் ஒரே தொகுதியில்.. பரபரக்கும் வேலூர்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி 3 நாட்கள் பிரசாரம் செய்ய உள்ளார்.

வேலூர் லோக்சபா தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதி கட்சியின் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

Edappadi Palanisamy to campaign for AC Shanmugam in Vellore

இந்த வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தமிழகம் முழுவதும் இருந்து அந்தந்த கட்சியினர் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இப்போதே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.

இந்நிலையில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும், 27, 28ம் தேதிகளிலும் ஆகஸ்ட் 2ம் தேதியன்றும் என மொத்தம் 3 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.

வாணியம்படி, ஆம்பூர், கீழ்வைத்தியணான்குப்பம், குடியாத்தம் அணைக்கட்டு வேலூர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் முதல்வர் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை துவங்கும், அதே 27ம் தேதிதான், கதிர் ஆனந்தை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+