Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் ஏரி குளங்களில் இலவசமாக வண்டல் மண், கிராவல், களி மண் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டங்கள் செய்ய மற்றும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது ஏரி, குளங்களில் இருந்து இலவசமாக வண்டல், கிராவல், களி மண் எடுக்க அனுமதிபெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலூர் கலெக்டர் அறிவித்துள்ளார்.

ஏரி, குளங்களில், விவசாய நிலத்தை மேம்படுத்தும் அடிப்படையில், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu vellore sand

இதில் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள திட்டம் ஆகும். அதேபோல் மண்பானை தொழில் செய்வோருக்கும் இத்திட்டம் உகந்தது ஆகும்.

இந்த திட்டம் குறித்து வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த, மண்பாண்டங்கள் செய்ய மற்றும் பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு தேவையான வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் உள்ள ஏரி, குளங்களில், விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றின் பட்டியல் மாவட்ட சிறப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு உள்ளது.

இந்த ஏரி, குளம், குட்டைகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் மண் பெறலாம். விவசாய தேவைகளுக்கு ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 மீட்டரும் மண் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். பொதுமக்கள் வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக 30 மீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை செய்வதற்கு 60 மீட்டரும் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

வண்டல், களி, கிராவல் மண் எடுக்க அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து சம்மந்தப்பட்ட தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். வண்டல், களி, கிராவல் மண்ணை தங்கள் கிராமத்தில் உள்ள ஏரி, குளத்தில் இருந்து பொதுமக்கள் எடுத்து பயன் அடையலாம்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+