சலித்து போன மனைவி.. மகளை திருமணம் செய்ய துடித்த தந்தை.. மறுத்த தாய் மர்ம மரணம்.. நடந்தது என்ன?
Recommended Video

வேலூர்: வாலாஜாப்பேட்டையில் மகள் உறவு உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது தந்தை கோரிய நிலையில் தாய் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்து மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகி 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் கல்பனாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவலர் குமரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ரமேஷ், கல்பனாவை விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து குமரேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.
[ஹனிமூன் சென்ற போது கோத்தகிரியில் வைத்து போட்டு தள்ள பிளான் செய்த அனிதா... 2 முறை எஸ்கேப் ஆன கதிரவன்]

வாரத்தில் ஒரு முறை
கல்பனாவும் மஞ்சும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். குமரேசன் சென்னையில் பணியாற்றி வருவதால் வாரத்தில் ஒரு முறை வாலாஜாப்பேட்டைக்கு வந்து கல்பனாவை சந்தித்து விட்டு செல்வது வழக்கம்.

மறுப்பு
கல்பனாவை விட வயதில் சிறியவரான குமரேசனுக்கு மஞ்சு மீது ஒரு கண் இருந்தது. அவரை எப்படியாயினும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். இந்த ஆசையை கல்பனாவிடம் சொன்னபோது மகள் உறவு கொண்ட பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பது என கேட்டு மறுப்பு தெரிவித்தார்.

தூக்கில் தொங்கிய கல்பனா
இதனால் எப்போது ஊருக்கு வந்தாலும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு குமரேசன், கல்பனாவை தாக்குவது வாடிக்கையாகி இருந்தது. இதனால் மனஉளைச்சலில் இருந்த கல்பனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று மஞ்சு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார்.

கோரிக்கை
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். தனது தாய் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும் மஞ்சு வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் குமரேசன் போலீஸ் என்பதால் அவருக்கு எதிரான அந்த புகாரை யாரும் ஏற்கவில்லை. தனது புகாரை போலீஸார் எடுக்க வேண்டும் என மஞ்சு கோரிக்கை விடுத்துள்ளார்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications