வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் ராஜ்யசபா எம்பி பதவி.. என்ன ஸ்டாலின் இப்படி சொல்லிட்டாரு!
வேலூர்: வேலையே செய்யாமல் சொகுசாக இருப்பதுதான் மாநிலங்களவை எம்பி பதவி என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பொன்னப்பந்தாங்கல் பகுதியில் திமுக சார்பில் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில் அரசியலில் அனாதையாக சுற்றுபவர்கள் கிராம சபை கூட்டம் குறித்து பேசுகிறார்கள். நம்முடன் சில தோழமை கட்சிகள் உள்ளனர். இன்னும் 2 நாட்களில் திமுக கூட்டணி அறிவிக்கப்படும்.

தயார்
பாஜகவுடன் அதிமுக மனதார கூட்டணியில் சேரவில்லை. ஒரு அச்சத்தின் பேரிலேயே சேர்ந்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதவர்கள் தற்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறார்கள்.

தயாரா
ஸ்டாலினுக்கு கிராமம் இப்போதுதான் தெரிகிறது எனக் கூறும் முதல்வர் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர தயாரா? நீங்கள் மேடை போடவில்லை என்றால் நான் மேடை போடுகிறேன். வரத்தயாரா?

அதிமுகவுடன் கூட்டு
வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் மாநிலங்களவை எம்பி பதவி ஆகும். ஆட்சி கவிழ்ந்தாலும் ராஜ்ய சபா பதவிக்கு ஆபத்தில்லை. திராவிட கட்சிகளை அழிப்பதுதான் நோக்கம் எனக் கூறியவர்கள் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளனர்.

கருணாநிதி
அதிமுக திராவிட இயக்கம் இல்லை என்பதை பாமக நிரூபித்துள்ளது. யார் எந்த கூட்டணி அமைத்தாலும் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். கருணாநிதி போல் என்னால் மட்டும் இல்லை. யாராலும் செயல்பட முடியாது.

கூட்டணி
அதிமுக பாமக கூட்டணி ஏற்கெனவே 2009-இல் தோற்கடிக்கப்பட்டதுதான் பாமக. அதிமுகவின் கதை என்ற புத்தகத்தை எழுதியவர்தான் ராமதாஸ். அவர்தான் அதே அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளார் என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். திமுக மாநிலங்களவை எம்பியாக கனிமொழி உள்ள நிலையில் வேலையே செய்யாமல் சொகுசாக பெறுவதுதான் மாநிலங்களவை எம்பி பதவி என ஸ்டாலின் குறிப்பிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications