தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுபுடவை.. முகத்தில் பூரிப்பு.. நளினி ஹேப்பி!
சிறையில் இருந்து வெளியே வந்த நளினி மகளுடன் செல்பி எடுத்து கொண்டார்
Recommended Video

வேலூர்: இதுக்கு முன்னாடி இப்படி ஒரு நளினியை நாம் பார்த்தே இல்லை.. தலையில் மல்லிகைப்பூ, ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை, வாய் நிறைய புன்னகையுடன் பரோலில் வெளியே வந்தார்!
அன்று செய்திதாள்களில் இடம் பிடித்து கொண்டிருந்த நளினி, முருகன் விவகாரம் இன்று சோஷியல் மீடியாக்கள் வரை வந்துவிட்டது. 28 ஆண்டுகள் ஜெயில் தண்டனை.. இன்னும் இது முடிவுக்கு வரவில்லை.
ஆனால் காலம் நளினியை ஒரு மாதத்துக்கு தற்காலிகமாக வெளியே வரவழைத்துள்ளது. இந்த தம்பதிக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளார். இவர் பிறந்ததே சிறையில்தான்.

ஹரித்ரா
தாய் தந்தையர் இருந்தும், பக்கத்தில் இல்லாமலேயே வளர்ந்தவர்.. தாயின் அரவணைப்பு, தந்தையின் ஆதரவு, இருவரின் அன்பு, இப்படி எந்தவித உணர்வுகளையுமே அனுபவிக்காமல், தனிமையில் வளரும் நிலைக்கு ஆளானார் ஹரித்ரா. நல்ல படிப்பு.. லண்டனில்தான் தங்கியிருந்தார்!

மன்னிப்பு
"என் பெற்றோரை மன்னித்து விடுங்கள்" என்று 2014-ல் ராகுல் காந்திக்கு ஒரு லட்டர் கூட எழுதியிருந்தார் இந்த பெண். இவருடைய திருமண ஏற்பாட்டுக்குதான் பரோலில் தன்னை 6 மாசம் விடுவிக்க வேண்டும் என்று கேட்டார் நளினி.

கண்ணீர்
ஆனாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இதை தடுத்தது. ஆனால் நளினியோ "என் மகளுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு சம்பிரதாய, சடங்குகளையும் நான் செய்ததே இல்லை" ஒரு சராசரி தாயாக கோர்ட்டில் தன் வாதத்தை கண்ணீருடன் நீதிபதியிடம் எடுத்துரைத்து வாதாடினார். இறுதியில் ஒரே ஒரு மாதத்துக்கான பரோல் அளித்தது நீதிமன்றம்.

புன்னகை
ஒரே ஒரு பெண்ணுக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் புடைசூழ, 30 நாட்கள் பரோலில் நளினி வெளியே வந்தார். எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சி.. ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை, மல்லிப்பூ என நளினியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தபடியே இருந்தது.

செல்பி
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணை பொதுச்செயலாளர் சிங்கராயர் வீட்டுக்கு சென்றதும், அவரது அம்மா பத்மாவதி ஆரத்தி எடுத்து, மகளை உள்ளே அழைத்து சென்றார். நளினையை நேரில் கண்டதும் உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரைந்து போவார்
நளினி தங்கி இருக்கும் நாட்கள் வரை தினந்தோறும் அறிக்கைகள் சிறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, எப்போதும் கூடவே இருக்கும் போலீஸ் பாதுகாப்பு.. போன்ற எத்தனையோ கெடுபிடிகளையும் மீறி ஒரு தாயின் சந்தோஷம் நளினியின் முகத்தில் இன்றைக்கு பார்க்க முடிகிறது. வரப்போகிற இந்த 30 நாளும் மகளின் அன்பில் நளினி கரைந்தே போய்விடுவார் என்று மட்டும் தெரிகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications