நீந்தியே வந்த கருப்பாயி சடலம்.. பாடையை தோளில் சுமந்து வந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ
கானாறு வழியாக பாலம் வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Recommended Video
எப்படியாவது இந்த மக்களுக்கு ஒரு பாலம் கட்டி தரக்கூடாதா என்று பலமாக கோரிக்கையும் எழுந்து வருகிறது. 3 வருஷமா உள்ளாட்சி தேர்தலை நடத்தல.. அப்படி நடத்தியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு அவல நிலை மக்களுக்கு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது. வேலூர்: கருப்பாயி எப்படி எல்லாம் வாழ்ந்தவரோ தெரியவில்லை.. ஆனால் அவரது இறுதி ஊர்வலம் மிக கொடுமையாக அமைந்து விட்டது. கழுத்தளவு தண்ணீரில் தோளில் சுமந்தபடி.. நீந்தி நீந்தி கரைசேரும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே சேர்பாடி என்ற கிராமம் உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு செல்ல இவர்களுக்கு பாதை இல்லை.

அதனால், கானாறு வழியாகத்தான் எந்த சடலத்தையும் கொண்டு செல்ல முடியும். இந்த கானாறு ஆபத்தானது.. அவ்வளவு சுலபத்தில் நீந்தி கரை சேர முடியாது. இப்படியே பல வருஷமாக இந்த அவலம் இருந்து வருகிறது.
கானாறு வழியாக ஒரு பாலம் கட்டி தருமாறு இந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எத்தனையோ முறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் கருப்பாயி பாட்டி இறந்துவிட்டார். இவ்வளவு நாள் உடம்பு சரியில்லாமல் இருந்தவர், நேற்று உயிரிழந்தார்.
உயிரிழந்த கருப்பாயி பாட்டியின் சடலத்தையும், இதே ஆற்று தண்ணீரில்தான் மக்கள் கொண்டு வந்துள்ளனர். 2 நாளைக்கு முன்னாடி பெய்த மழையால் கானாறில் நிறைய தண்ணீர் ஓடுகிறது. இந்த கழுத்தளவு தண்ணீரில் சடலத்தை தோளில் வைத்து நீந்தி நீந்தி கரையை நோக்கி வருகிறார்கள் மக்கள். இப்படியே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு சடலத்தை தூக்கி வருகிறார்கள்.
ஆர்ப்பரித்து ஓடும் நீரில், பாடையை தூக்கி கொண்டு நீந்தி வரும் இந்த காட்சியை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோ எடுத்து வெளியிடவும், அது இப்போது வைரலாகி வருகிறது.
எப்படியாவது இந்த மக்களுக்கு ஒரு பாலம் கட்டி தரக்கூடாதா என்று பலமாக கோரிக்கையும் எழுந்து வருகிறது. 3 வருஷமா உள்ளாட்சி தேர்தலை நடத்தல.. அப்படி நடத்தியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு அவல நிலை மக்களுக்கு ஏற்படுமா என்ற கேள்வியும் பரவலாக எழுந்து வருகிறது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications