நாங்க 3 பேரும் அழைத்தோம்.. அப்படியும் அதிமுகவில் இணைய மறுத்துவிட்டார்.. ஓபிஎஸ் போட்ட குண்டு!
டிடிவி தினகரனை நாங்கள் பலமுறை அழைத்தோம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம்: நல்லாதான் பேசி பிரச்சாரம் பண்ணிட்டு வந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்.. திடீரென்றுதான் அந்த குண்டை தூக்கி போட்டார்!
அதிமுக, அமமுக என இரண்டாக உடைந்ததில் இருந்தே இரு கட்சிகளையும் இணைக்க ஒருசிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் முடியவில்லை.
ஒரு கட்டத்தில் அமமுகவில் உள்ளவர்களுக்கு அதிமுக தரப்பினரே பகிரங்கமாக அழைப்பு விடுத்தனர். அதிலும் முதல்வர் எடப்பாடியில் இருந்து ஜெயக்குமார் வரை ஒருமித்த குரலில் சொன்ன ஒரே வார்த்தை, "அந்த ஒருத்தரை தவிர யார் வேண்டுமானாலும் இணையலாம்" என்பதுதான்!

அமைச்சர் ஜெயக்குமார்
அதிலும் செல்லூர் ராஜு ஒருமுறை சொல்லும்போது "தினகரன் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை" என்றார். அமைச்சர் ஜெயக்குமாரோ, "எழுதி வெச்சுங்குங்க.. தினகரனை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்" என்றார்.

குடியாத்தம் பிரச்சாரம்
இவ்வளவும் பேசியதால் அதிமுகவில் தினகரன் ஒருபோதும் சேர போவது இல்லை என்ற முடிவுக்கு எல்லோருமே வந்துவிட்டார்கள். ஆனால் நேற்று துணை முதல்வர் ஓபிஎஸ் குடியாத்தத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சுனாமியே வந்தாலும்..
"ஜெயலலிதாவுடன் 35 ஆண்டுகள் இருந்த தினகரன் பதவி வெறி காரணமாக இந்த தேர்தல் நடக்கிறது. அவர்களிடம் சென்றவர்கள் அதிமுகவில் பொறுப்பில் இல்லாதவர்களே. சுனாமியே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்

மறுத்துவிட்டார்
சபாநாயகரும் நானும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அழைத்தபோதும் கூட அதிமுகவில் இணைய தினகரன் மறுத்துவிட்டார்" என்றார். இதைக்கேட்டதும் கூட்டத்தில் ஒரு சலசலப்பு ஏற்பட ஆரம்பித்து விட்டது. "இந்த சமாச்சாரம் எப்போ நடந்தது.. புதுசு புதுசா சொல்றாரே.." என்று அதிமுகவினர் ஒரு பக்கம் சலசலக்க.. அமமுகவினர் அதற்கு மேல் ஷாக் ஆகி விட்டார்களாம்!












Click it and Unblock the Notifications