திருப்பத்தூரில் 140 கிராம் தங்க நகைகள் அடமானம்.. கேமராவுக்கு டாட்டா காட்டிய நகைக்கடை உரிமையாளர்
வேலூர்: கர்நாடகாவில் நடந்த ஒரு திருட்டு சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தையே கதிகலங்க வைத்துவிட்டது.. பெங்களூரில் இருந்து தொடங்கிய இந்த நகை மேட்டர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன், லாட்ஜ், நகைக்கடைவாசல், செய்தியாளர்களின் கேமரா வரை சென்று பரபரப்பையும் தந்துவிட்டது.. அதை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள லம்பாடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் அல்தாப் உசைன்.. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் சுமார் 140 கிராம் தங்க நகையை திருடி வந்துவிட்டதாக தெரிகிறது..

அடமானம் 140 கிராம் தங்க நகைகள்
திருடிய நகையை, எப்படியாவது பணமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், திருப்பத்தூருக்கு கிளம்பி வந்தார் அல்தாப் உசைன்.. அங்கு தர்மராஜா கோவில் தெருவில் இயங்கி வரும் அருள் என்பவரின் நகைக்கடையில், திருட்டு நகையை அடமானம் வைத்துள்ளார் அல்தாப்.
இதனிடையே, காணாமல் போன நகையின் உரிமையாளர்கள், சுழியா போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தனர்.. இந்த புகாரின்பேரில் நகையை திருடியவர்கள் யார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டபோது, அல்தாப் உசைன் என்பவர் நகையை திருடியது போலீசாருக்கு உறுதியானது.
உடனே அல்தாப் உசைனை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.. அவரிடம் நகை எங்கே? என்று கேட்டதற்கு. திருடப்பட்ட நகைகளை திருப்பத்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் அடமானம் வைத்திருப்பதாக சொன்னார்.
நகைக்கடை உரிமையாளர்
இதையடுத்து, கர்நாடக போலீசார், லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்து, அல்தாப் உசைனையும், நகைக் கடை உரிமையாளரையும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது நகைக்கடை உரிமையாளர் முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு வந்துள்ளார்.
பிறகு, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அல்தாப்பையும், திருட்டு நகையை அடமானம் வைத்து பணம் தந்த நகைக்கடை ஓனர் அருளையும் விசாரணைக்காக பெங்களூர் அழைத்து செல்ல உள்ளதாக கர்நாடக போலீசார் கூறியுள்ளனர்..
லாட்ஜில் சமரசம்
இதைக்கேட்டதுமே அங்கிருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.. திருடனை மட்டும் அழைத்து செல்லாமல், நகைக் கடை உரிமையாளரை ஏன் அழைத்து செல்ல வேண்டும்? என்று கேட்டு, நகைக்கடைக்காரர் அருளுக்கு ஆதரவாக, சில வழக்கறிஞர்கள் அங்கு திரண்டுள்ளனர்.. கர்நாடக போலீசாரிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையையும் வழக்கறிஞர்கள் நடத்தி உள்ளனர்..
பிறகு,அருகிலுள்ள தனியார் லாட்ஜூக்கும் கர்நாடக போலீசாரை அழைத்து சென்று சமரச பேச்சில் ஈடுபட்டார்களாம்.. இதற்கு பிறகுதான், கடை உரிமையாளரை விடுவித்துவிட்டு, அல்தாப் உசைனை மட்டும் தங்களுடன் கர்நாடக போலீசார் அழைத்துச் சென்றார்களாம்.
மேற்கண்ட இந்த பரபரப்பு மீடியாவுக்கு தெரிந்து, என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள செய்தியாளர்கள் நகைக் கடை உரிமையாளர் அருளிடம் கேட்க முயன்றனர்..
கொலையா செஞ்சுட்டேன்
அதற்கு நகைக்கடை ஓனர், நான் என்ன கொலையா செஞ்சுட்டேன்? இப்படி வீடியோ எடுக்குறீங்க! என்று கடுப்பாக கேட்டதுடன், செய்தியாளர்களின் செல்போன் முன்பு டாட்டா காண்பித்தும் போஸ் கொடுத்துள்ளார்.. பிறகு கடையை மூடிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டாராம்.
திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கர்நாடக போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தபோது, முகத்தை கர்சீப்பால் மூடிக்கொண்டு வந்த நகைக்கடை ஓனர் அருள், இப்போது கேமராவுக்கு டாட்டா காட்டிவிட்டு போகிறாராம்.. அப்படியானால் ஏதோ சம்திங் லாட்ஜில் சமரசத்தின்போது நடந்திருக்குமோ?? என்று திருப்பத்தூரில் சலசலத்து வருகிறார்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications