18 வயசு.. அரசு பள்ளி மாணவர்.. +2வில் நல்ல மார்க்.. அம்மா சேலையில் தூக்கில் தொங்கிய பரிதாபம்!
பிளஸ் 2 மாணவன் தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தி வருகிறது
வேலூர்: மாந்தோப்பில் சேலையில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார், அரசு பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவர் ஒருவர்.. இந்த சம்பவம் குடியாத்தத்தை அதிர வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வரும் தம்பதி பாலாஜி-சுமதி.. இவர்களின் மகன் அசோக்குமாருக்கு 18 வயதாகிறது.. குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று தமிழகம் முழுவதும் தேர்வு முடிவுகள் வெளியானது... இதில் அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.. அரசு பள்ளியில் இவர்தான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துள்ளார். ஆனாலும் எதிர்பார்த்த மார்க் இவருக்கு கிடைக்கவில்லை போலும்.. மார்க் குறைந்துவிட்டதால், ரிசல்ட் வந்ததில் இருந்தே கவலையில் இருந்தார்.
ஒருகட்டத்தால், இதை தாங்கி கொள்ள முடியாத அவர், வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மாந்தோப்பிற்கு சென்று, சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்... தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அசோக்குமார் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர்... பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகன் முதல் மாணவனாக வந்ததை நினைத்து பெற்றோரும், பள்ளியிலும் நேற்றெல்லாம் சந்தோஷமாக இருந்தனர்.. இந்நிலையில் சடலத்தை கண்டு கட்டிப்பிடித்துகொண்டு அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.. அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டது உடனடியாக ஸ்கூலுக்கு தெரியப்படுத்தப்பட்டது.. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் என எல்லாருமே திரண்டு அசோக்குமார் வீட்டுக்கு வந்து கதறி அழுதனர்.. உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
ஃபெயில் ஆனவர்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.. முதல் மார்க் எடுப்பவர்களும் இப்படி தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஏற்கவே முடியவில்லை.. பிள்ளைகளுக்கு தீவிரமான கவுன்சிலிங் போன்றவைகளை வழங்க பள்ளிகள், அரசு நடவடிக்கை எடுத்தால் நல்லா இருக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications