வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தல் எப்போது?.. சத்யபிரதசாஹூ பதில்
Recommended Video
சென்னை: வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தெரிவித்தார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த நிலையில் ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில் வாக்குப் பதிவு நடத்துவதற்கு முன்பாக வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும் வேலூர் எம்பி தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் பள்ளி மற்றும் கல்லூரியிலும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
இதில் ரூ. 10 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. அது மட்டுமல்லாமல் திமுக பிரமுகர் வீட்டிலிருந்து வார்டு எண், தெரு பெயருடன் கூடிய கட்டுக் கட்டாக பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இந்த நிலையில் வேலூர் தேர்தலை நடத்த கோரி அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏசி சண்முகம் நீதிமன்றத்தை நாடினார். எனினும் பலனில்லை. இந்த நிலையில் 13 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப் பதிவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ விளக்கினார்.
அப்போது அவரிடம் வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதில் அளிக்கையில் வேலூரில் ரத்தான லோக்சபா தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் எந்த பதிலையும் அளிக்கவில்லை என சாஹூ தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications