ராணிப்பேட்டையில் ஷாக்.. வீடு புகுந்து 15 வயது சிறுமி குத்திக்கொலை! மற்றொரு சிறுமி படுகாயம்
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 15 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை ஊர் மக்கள் மடக்கி பிடித்திருக்கின்றனர்.
சோளிங்கரை அடுத்த புலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்குள்ள வாரச்சந்தைக்கு பின் பகுதியில் உள்ள வீட்டில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுமி இருந்திருக்கின்றனர். இருவரும் உறவினர்கள். இந்நிலையில் இன்று மாலை கையில் கத்தியுடன் வீடு புகுந்த இளைஞர் சிறுமி 15 வயது சிறுமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இளைஞரின் பிடியிலிருந்து தப்பிக்க சிறுமி முயன்ற நிலையில், இளைஞர் மேலும் பலம் கொண்டு தாக்கியுள்ளார். இதில் சிறுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சிறுமி உயிரிழந்திருக்கிறார். 16 வயது சிறுமி இளைஞரை தடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. இதனால் மற்றொரு சிறுமிக்கும் கத்தி குத்து ஏற்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சத்தம்போட்டு அக்கம் பக்கத்தினரை சிறுமி அழைத்திருக்கிறார். ஊர் மக்கள் சேர்ந்த இளைஞரை துரத்தி பிடித்துள்ளனர். இரண்டு பேர் வந்ததாகவும், ஒருவரை மட்டுமே பிடிக்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
கொலை ஏன் நடந்தது? சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞருக்கு சிறுமியை முன்கூட்டியே தெரியுமா? பாலியல் வன்கொடுமை முயற்சியா? சொத்து பிரச்சனைக்கான பழிவாங்களா? முன் விரோதமா? என பல கோணங்களில் இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications