ஆம்பூர் அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து.. குழந்தை உட்பட 7 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஆம்பூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த 4 ஆண்கள் 2 பெண்கள் ஒரு குழந்தை என 7 பேர் பெங்களூரு - சென்னை நெடுஞ்சாலையில் காரில் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அப்போது வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கிலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது.

Terffic Accident near Vellore: 7 dead

இதில் நிலை தடுமாறிய கார் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது வேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்து போனது.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 ஆண்கள், 2 பெண்கள், ஒரு குழந்தை என 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 7 பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து ஆம்பூட் வட்டாட்சியர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த விபத்தால் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+