குடியாத்தம் அருகே பேரணாம்பட்டில் 3 ஆவது முறையாக நில அதிர்வு.. மக்கள் அச்சம்.. வீடுகள் சேதம்
வேலூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதில் சில வீடுகள் சேதமடைந்தன
Recommended Video
குடியாத்தம் அருகே உள்ள பேரணாம்பட்டில் மீண்டும் ஒரு நில அதிர்வு இன்று காலை ஏற்பட்டது. இரு முறை விட்டுவிட்டு ஏற்பட்ட நில அதிர்வு சுமார் 3 வினாடிகள் நீடித்ததாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த அதிர்வால் சில வீடுகள் லேசான சேதமடைந்தன.
இன்று ஏற்பட்டது 3ஆவது முறையாகும். ஏற்கெனவே நவம்பர் 28, டிசம்பர் 23 ஆகிய தேதிகளில் நில அதிர்வை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி ஏற்பட்ட நில அதிர்வு 3.6 ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருந்தது.

பேரணாம்பட்டில் நில அதிர்வு
இந்த நாளில் பேரணாம்பட்டு பகுதியில் பலத்த சப்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சூப்பர்சானிக் விமானங்கள் பறந்தால் அதன் மூலம் அதிர்வுகள் ஏற்பட்டு அது போல் அதிர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதியும் குடியாத்தம் அடுத்த மீனூர் கிராமத்தில் நில அதிர்வு ஏற்பட்டது.

நில அதிர்வு
இதனால் பல வீடுகள் விரிசல் அடைந்தன. அது போல் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி டிடி மோட்டூர், கமலாபுரம் ஆகிய கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். தொடர்ந்து குடியாத்தத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வுகள் ஏற்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிகாரப்பூர்வமாக 3ஆவது முறை என சொல்லப்பட்டாலும் மக்கள் இன்று ஏற்பட்டதை 4ஆவது முறை என்கிறார்கள்.

வீடுகள் சேதம்
இந்த சாதாரண நில அதிர்வுகளால் வீடுகள் சேதமடைந்துள்ளது. எனவே நில அதிர்வுக்கான காரணம் குறித்து புவியியல் நிபுணர்களை வைத்து கண்டறியுமாறு மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பெரிய பாதிப்புகள் ஏற்படும் முன்னர் காரணத்தை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நில அதிர்வு
அது போல் கடந்த 22 ஆம் தேதி பெங்களூருவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவானது. பெங்களூருவின் வடக்கு திசையில் 66 கி.மீ. தொலைவிலும் 23 கி.மீ. ஆழத்திலும் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications