விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை.. மதமாற்றம் செய்யவே கட்சி ஆரம்பித்துள்ளார்.. அர்ஜூன் சம்பத் அட்டாக்
வேலூர்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், விஜய்க்கு அரசியல் அறிவு இல்லை என்றும், மதமாற்றம் செய்யவே கட்சி ஆரம்பித்துள்ளார் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
வேலூருக்கு வந்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் செங்கோல் வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு முன்பு ஆதரவாக வாக்களித்துவிட்டு தற்போது வரலாற்று பிழை என்று எதிர்த்து பேசுகிறார். தஞ்சை பெரிய கோவிலில் நாட்டியாஞ்சலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்து விரோத அரசாக செயல்படுகிறது. பிரதமர் மோடி ஆதரவு அலை தமிழகத்தில் வீசுகிறது. இந்த அலை அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும்.
தமிழக முதல்வர் குடியுரிமை திருத்த சட்டம் பிரிவினையை உருவாக்கும் எனக் கூறுகிறார். இந்த சட்டத்தால் ஒருவருக்கும் பாதிப்பு கிடையாது. புதியதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய், CAA விவகாரத்தில் அடிப்படை அரசியல் அறிவு இல்லாமல் பேசுகிறார். விஜயின் அறிக்கைக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த நிறுவனங்கள் விஜய்க்கு பின்னால் இருந்து கொண்டு இயக்குகின்றன.
மதமாற்றம் செய்யவே விஜய் கட்சி தொடங்கியுள்ளார். இலங்கை தமிழர்களுக்கு இங்கு இரட்டை குடியுரிமை கொடுக்க தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில், தமிழகத்தில் ஒரு இஸ்லாமியராவது பாதிக்கப்பட்டதாக நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசளிக்க தயாராக உள்ளோம்.
நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேரந்த திமுக கூட்டணி எம்பிக்கள் அனைவரும் கடந்த 5 ஆண்டுகளும் பிரதமர் மோடியை எதிர்த்து பேசுவதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தனர். தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஏதும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும், சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் என்றும் பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறுகையில், "சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்" என்று கூறியிருதார். இந்த நிலையில், தான் விஜயின் கருத்துக்கு அர்ஜூன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா – நியூசிலாந்து இறுதி போட்டி.. உலக கோப்பையை வெல்ல போவது யார்.. ஜோதிட கணிப்பு -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
ஜனாதிபதிக்கே மரியாதை இல்லையா? மம்தாவை குறிவைத்த மோடி - அமித் ஷா! திரிணாமுல் கொடுத்த விளக்கம்! -
கடலில் தவித்த ஈரான் போர்க்கப்பல்.. அமெரிக்காவிடம் சிக்காமல் காப்பாற்றிய இந்தியா! பரபரப்பு சம்பவம் -
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை.. உண்மை இதுதான் -
இந்தியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு இருக்காது.. சரியான நேரத்தில் உள்ளே வந்த ரஷ்யா! அமெரிக்காவுக்கு செக் -
30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா! -
"வேண்டாம்.." இதுவரை ஒரே ஒரு அமெரிக்க போர் விமானத்தை கூட வாங்காத இந்தியா.. என்ன காரணம் தெரியுமா? -
இஸ்ரேலை நம்பாத இந்தியா! ஆயுத கொள்முதலில்.. ரஷ்யாவுடன் சைலண்டாக டீல் முடிந்தது! -
UPSC தேர்வு முடிவுகள்.. அகில இந்திய அளவில் தமிழக மாணவி ராஜேஸ்வரி 2ஆம் இடம்! மற்றொரு மாணவர் 7வது இடம் -
"இந்தியா தான் பெஸ்ட்.. அமெரிக்கா கூட தோத்துடும்" பாராட்டி தள்ளிய அமெரிக்க யூடியூபர்.. டிரெண்டிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல்












Click it and Unblock the Notifications