திருப்பத்தூரே திகைச்சிடுச்சு.. "அது" கிட்ட போய் பெட்டிஷனை தந்து.. பாஜக பிரபலம் பண்ண வேலையை பாருங்க
வேலூர்: சுரேஷ்குமார் கையில் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, திருப்பத்தூர் மாவட்ட மக்களை அதிர செய்துள்ளது.. பாஜக பிரமுகர் ஏன் இப்படி செய்தார்? என்ற ஆச்சரியமும் கிளம்பி உள்ளது,. அரசியல் அலட்சியத்தை விமர்சிக்கும் விதமாக சுரேஷ்குமார் திருப்பத்தூரில் செய்தது என்ன தெரியுமா?
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்... காக்கங்கரை பகுதியில் சமூக ஆர்வலராகவும், பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சார பிரிவு இணை செயலாளராகவும் செயற்பட்டு வருகிறார் சுரேஷ்குமார். தற்போது வித்தியாசமான சம்பவத்தை செய்து, திருப்பத்தூரில் கவனம் பெற்றுள்ளார். அது என்ன தெரியுமா?

பாஜக பிரமுகர் சுரேஷ்குமார்
பொதுவான பிரச்சனைகள், தனிப்பட்ட பிரச்சனைகள் உள்ளிட்டவைகளுக்காக மாவட்ட ஆட்சியர்களிடம் பொதுமக்கள் மனு கொடுப்பது வழக்கம்..
அப்படி மனு கொடுத்தால் சம்பந்தப்பட்டட மாவட்ட ஆட்சியர் அதை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவர். உண்மையான பிரச்சனை இருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். நடவடிக்கை எடுக்கும் நேரம் சம்பவத்தின் தன்மை, சட்ட நடைமுறை, அதிகாரிகள் செயல்திறனை பொறுத்து மாறும்.
கலெக்டரிடம் மனு
அப்படித்தான் சுரேஷ் குமாரும், பல்வேறு பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியருக்கு மனுக்களின் மூலம் தெரிவித்து வந்துள்ளார்.. ஆனால், கடந்த காலத்தில் அவரது மனுக்களில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.. ஒவ்வொரு முறை மனு தந்தாலும், அந்த புகார் மனுவை விசாரிக்காதது சுரேஷ்குமாரை ஆத்திரப்படுத்தியுள்ளது.
இதனால் அதிருப்திக்கு உள்ளான சுரேஷ்குமார், நேற்று துரைநகர் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு சென்றார்.. அங்கே புதைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் நாயுடு என அடையாளம் தெரியாத சடலத்திடம் மனு தந்தார்...
"பிணம் அவர்களே நீங்களாவது என் பெட்டிஷன் மீது நடவடிக்கை எடுங்க!" என்று சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பாலகிருஷ்ணன் நாயுடு என்ற உடலிடம் பெட்டிஷனை தந்து, தன்னுடைய ஆதங்கத்தை கொட்டினார்.
பாலகிருஷ்ணனின் இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம், ரிங் ரோடு அமைப்பிற்கு போலி பர்மிட் கொடுத்து கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டு, அதனை கனிமவளத்துறை கவனிக்காமல் களவாணித் துறையாக செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி மனு தந்தாராம்.
பிணம் அவர்களே
அதேபோல், இரவு நேரங்களில் கனிமம் மற்றும் பல கொள்ளைகள் நடைபெற்று வருவது, சிண்டிகேட் அமைத்து புளியமரம் ஏலம் விடப்பட்டதை, தூய்மை பாரத் இந்தியா திட்டத்தின் கீழ் பெறப்பட்ட குப்பை தொட்டிகளை விற்பனை செய்தது போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் சுரேஷ்குமார் மனுக்களாக கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து தந்து வந்துள்ளார்.. ஆனால் எதற்குமே நடவடிக்கையும், விசாரணையும் இல்லை என்பதால் நொந்து போய் சுடுகாட்டில் பிணத்திடம் மனு தந்துள்ளார்..
அவரின் இந்த செயல்பாடு, அரசியல் மற்றும் சமூக ஒழுங்கு தொடர்பான முக்கியமான பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதுடன், பொதுமக்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து?












Click it and Unblock the Notifications