பாரதிதாசனின் கருத்து ஆசான் பெரியார்... இந்தி தேசிய மொழியா? - நடிகர் அஜய் தேவ்கனுக்கு வைரமுத்து பதிலடி
வேலூர்: இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்றோ, பொது மொழி என்றோ பொதுவெளியில் இனி யாரும் கருத்தை முன் வைக்கக்கூடாது என்று விரும்புவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
பாவேந்தர் பாரதிதாசனின் 132 வது பிறந்தநாள் பெருவிழா வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழியக்க பொதுச் செயலாளர் அப்துல் காதர், பொருளாளர் பதுமனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழுக்காக உயர் தியாகம் செய்தவர்களுக்கு வணக்கம்
இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், "இந்தியை எதிர்ப்பதற்காகவும் தமிழ் மொழியை காப்பதற்காகவும் பலர் தங்கள் உயிரை தியாகம் செய்து இருக்கின்றனர். அவர்களை நாம் வணங்குகிறோம். ஆனால், இவ்வளவு போராட்டங்களை நடத்தியும் நாம் மீண்டு உள்ளோமா என்பது கேள்விக்குறிதான்.

இந்தி தேசிய மொழி என்று சொல்லக்கூடாது
வடநாட்டு கலைஞர்கள் சிலர் இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்று சொல்கிறார்கள். இந்தியை இந்தியாவின் தேசிய மொழி என்றொ அல்லது இந்தியாவின் பொது மொழி என்றோ பொதுவெளியில் யாரும் சொல்லக்கூடாது என்று நான் விரும்புகிறேன். பன்முகத்தன்மை கொண்ட பல கலாச்சாரங்களால் சேர்த்து தைக்கப்பட்ட தேசம் இது.

தமிழில் பெயர் வையுங்கள்
தமிழ் மக்கள் தங்களின் குழந்தைகளுக்கு தமிழில் பெயர்களை வைக்காமல் வட மொழியில் பெயர் வைக்கின்றனர். பெயர் என்பதுதான் நமது அடையாளமும் கலாச்சாரமும் ஆகும். பெயர் என்பதுதான் வரலாற்று தொடர்ச்சி. தமிழில் குழந்தைகளுக்கு பெயரை சூட்டுங்கள். அதுதான் பாவேந்தருக்கு நாம் செய்திடும் பெருமை." என்றார்.

பாரதிதாசனின் கருத்து ஆசான் பெரியார்
இந்த நிகழ்வு குறித்து ட்விட்டரில் புகைப்படத்துடன் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில், "இன்று வேலூரில் பாவேந்தர் பாரதிதாசன் 132ஆம் பிறந்தநாள் பெருவிழா. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் சிறப்புரை செய்தேன். 'பாவேந்தருக்கு இரண்டு ஆசான்கள்; கவிதைக்கு எட்டயபுரம்; கருத்துக்கு ஈரோடு' என்றேன். அதிர்ந்தது அரங்கம்! கரவொலியால்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications