வேலூர் மக்கள் நரிமுகத்துல முழிச்சிருப்பாங்க போல.. 1000 ஆயிரம் கேட்டால்.. ரூ.3000 தந்த ஏடிஎம்!
வேலூர்: காசு மேல காசு வந்து.. கொட்டுகிற நேரமிது.. வேலூர் குடியாத்தம் பகுதியில் 1000 பணம் எடுக்க வந்தவர்களுக்கு 3000 ரூபாயை ஒரு ஏடிஎம் தூக்கி கொடுத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்த மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதுபற்றி தகவல் அறித்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம்மை மூடினார்கள். கூடுதல் பணம் எடுத்தவர்களிடம் பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
ஏடிஎம்களில் பணம் எடுக்க போனால், அங்கு பணம் இல்லை என்று பதில் வரும். அப்படி இல்லை என்றால் 500 ரூபாய் தான் இருக்கிறது என்று பதில் வரும். பொதுத்துறை வங்கிகளின் ஏடிஎம்களில் மட்டுமே 100 ரூபாய் வருகிறது. தனியார் வங்கி ஏடிஎம்களில் 200 அல்லது 500 ரூபாய் தான் பெரும்பாலும் வருகிறது.

பணத்தை மெட்ரோ நகரங்களில் மூன்று முறைக்கு மேல் எடுத்தால் அதற்கு தனியாக கட்டணமும் வசூலிப்பார்கள். உதாரணமாக 25 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள். மற்ற பகுதிகளில் என்றால் ஐந்துமுறை எடுக்கலாம். அதற்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிப்பார்கள். இதுதான் நடக்கிறது.
சரி விஷயத்திற்கு வருவோம்.. வேலூர் குடியாத்தம் பகுதியில் 1000 பணம் எடுக்க வந்தவர்களுக்கு 3000 ரூபாயை ஒரு ஏடிஎம் தூக்கி கொடுத்துள்ளது.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்டுச் சாலை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்று இயங்கி வருகிறது.
இந்த ஏ.டி.எம் மையத்தில் உள்ள இயந்திரத்தில், சனிக்கிழமை இரவு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 பணம் எடுத்தபோது ரூ.3000 கிடைத்துள்ளது. இதனால் உற்சாகம் அடைந்தபலரும் தங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவித்தனர்.
இதையடுத்து பலர் அந்த ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கும், வங்கி அதிகாரிகளுக்கும் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் வங்கி அதிகாரிகளும், காவல் துறையினரும் விரைந்து வந்தனர். ஏடிஎம் இயந்திரத்தை சோதனை செய்து விட்டு உடனடியாக அந்த ஏடிஎம் மையத்தை தற்காலிகமாக மூடினார்கள். மேலும், அங்கு கூடிய கூட்டத்தை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து வங்கி அதிகாரிகள் செய்தியாளர்களிடம் பேசும் போது, "ரூ.1000 வேண்டும் என்றால் ஒரு 500 ரூபாய் நோட்டு, நூறு ரூபாய் நோட்டுகள் ஐந்து என்ற வீதத்தில் வழங்கப்பட வேண்டும். ஆனால், தவறுதலாக ஆறு நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளாக வழங்கி இருக்கிறது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 3 ஆயிரம் ரூபாய் பணம் வந்துள்ளது. கூடுதல் பணம் எடுத்து சென்றவர்கள் அடையாளம் காணப்பட்டு பணத்தை மீட்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications