Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடு கட்ட கூடுதலாக 5 ஏரிகளில் மண் எடுக்க கலெக்டர் அனுமதி

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலுர் மாவட்டத்தில் மேலும் ஐந்து ஏரிகளில் அனுமதி பெற்று பொதுமக்கள் மண் எடுக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி அனுமதி அளித்துள்ளார். மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டர் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.

வேலுர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் அரசு அனுமதி அளித்த ஏரிகளில் வண்டல், களிமண் அல்லது கிராவல் மண் எடுக்க விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் (தாசில்தார்) மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

Vellore Collector approves extraction of soil from 5 more lakes for public housing construction

இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த மண்பாண்டங்கள் செய்ய பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு மற்றும் பிற பயன்பாட்டு தேவையான வண்டல் மண், களி மண், மண் ஆகியவற்றை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இருந்து எடுக்க கூடுதலாக தகுதி வாய்ந்த 5 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளது.

அதன்படி சேக்கனூர் ஒதியத்தூர் ஏரி, மூஞ்சூர்பட்டு ஏரி, விக்கிரமாச்சி ஏரி, கே.வி.குப்பம் ஒதியத்தூர் ஏரி, திருமணி பொன்னியம்மன் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதுதவிர பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை செய்ய 60 கனமீட்டரும் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தாசில்தார்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரிகள், குளங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள 303 ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அனுமதி பெற்று எடுத்து பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+