வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் வீடு கட்ட கூடுதலாக 5 ஏரிகளில் மண் எடுக்க கலெக்டர் அனுமதி
வேலூர்: வேலுர் மாவட்டத்தில் மேலும் ஐந்து ஏரிகளில் அனுமதி பெற்று பொதுமக்கள் மண் எடுக்கலாம் என கலெக்டர் சுப்புலெட்சுமி அனுமதி அளித்துள்ளார். மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ளலாம். பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டர் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம்.
வேலுர் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகத்தில் அரசு அனுமதி அளித்த ஏரிகளில் வண்டல், களிமண் அல்லது கிராவல் மண் எடுக்க விரும்புவோர் tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் (தாசில்தார்) மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாய நிலத்தை மேம்படுத்த மண்பாண்டங்கள் செய்ய பொதுமக்களின் பொது பயன்பாட்டுக்கு மற்றும் பிற பயன்பாட்டு தேவையான வண்டல் மண், களி மண், மண் ஆகியவற்றை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள ஏரிகளில் இருந்து எடுக்க கூடுதலாக தகுதி வாய்ந்த 5 ஏரிகள் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி சேக்கனூர் ஒதியத்தூர் ஏரி, மூஞ்சூர்பட்டு ஏரி, விக்கிரமாச்சி ஏரி, கே.வி.குப்பம் ஒதியத்தூர் ஏரி, திருமணி பொன்னியம்மன் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து பொதுமக்கள், மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு நஞ்சை நிலமாக இருந்தால் 75 கனமீட்டரும், புஞ்சை நிலமாக இருந்தால் 90 கனமீட்டரும் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.
இதுதவிர பொதுமக்கள் வீடு கட்டுதல் போன்ற தங்கள் சொந்த தேவைக்காக 30 கனமீட்டரும், மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானை செய்ய 60 கனமீட்டரும் இலவசமாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதி பெற விரும்புவோர் tnesevai.tn.gov.in -என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து தாசில்தார்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 105 ஏரிகள், குளங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள 303 ஏரிகள், குளங்களில் இருந்து வண்டல் மண், களிமண் ஆகியவற்றை அனுமதி பெற்று எடுத்து பயனடையலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications