8வது பிரசவம்.. "குடும்ப கட்டுப்பாடு" பண்ண சொன்ன வேலூர் டாக்டர்.. அடுத்த செகண்ட் மனைவி செய்த காரியம்
வேலூர்: பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிறைமாத கர்ப்பிணியான அமுதா என்ற பெண் திடீரென மாயமானதால், வேலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. அடுத்து என்ன ஆனது? வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ளது மேல்ஆலாங்குப்பம்.. இந்த கிராமத்தில் வசித்து வரும் தம்பதி பிரசாந்த் - அமுதா.. இப்போது 29 வயதாகிறது.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் பிறந்தன.. இதில், 2 குழந்தைகள் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டன.. தற்போது 5 குழந்தைகளும் நலமாக உள்ளனர்.. பிரசாந்த் ஒரு கூலித்தொழிலாளி ஆவார்..
கூலித்தொழிலாளி: எனினும் குடும்ப வறுமை காரணமாக, அமுதாவும், 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் அமுதா 8வது முறையாக கர்ப்பமானார்.
இதையடுத்து, அருகிலுள்ள மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.. அமுதாவுக்கு நிறைமாதம் என்பதால், வேலூர் காக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.. 8வது பிரசவம் என்று தெரிந்ததுமே அங்கிருந்த டாக்டர்கள், பிரசவம் முடிந்ததுமே, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள்..
குடும்ப கட்டுப்பாடு: இதைக்கேட்டு அமுதா அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது.. குடும்ப கட்டுப்பாடு செய்யவும் விரும்பவில்லை போலும்.. இதனால், பிரசவம்கூட முடியாமல், கடந்த 4ம் தேதியே, தன்னுடைய கணவரை அழைத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் அந்த மருத்துவமனையிலிருந்து நிறைமாத கர்ப்பிணியாகவே வெளியேறி விட்டாராம்..
பிரசவ வார்டில் அமுதாவை காணோம் என்றதுமே, பதறிப்போன டாக்டர்கள், மருத்துவமனை முழுக்க தேடினார்கள்.. எங்குமே அமுதா இல்லை என்பதால், உடனடியாக மேல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, வட்டார மருத்துவ அலுவலர் செல்வி, விஏஓ உதயகுமார், நர்ஸ் விஜயகுமாரி, கலைவாணி, சுகாதார ஆய்வாளர் அஜித் ஆகியோர் கொண்ட குழுவினர் உடனடியாக மேல்ஆலாங்குப்பம் கிராமத்திலுள்ள அமுதா வீட்டுக்கு விரைந்து சென்றார்கள்.
விழிப்புணர்வு: சமூகத்தின் பொருளாதார நிலை குறித்தும், குடும்ப சூழல் குறித்தும், விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனிமேல் தங்கள் குடும்பத்திற்கு தேவையானவைகளை கருத்தில் கொண்டு குடும்ப கட்டுப்பாட்டில் பங்கெடுக்க வேண்டும் என்றும் தம்பதியருக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. பிறகு, அமுதாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து, பிரசவத்துக்காக அனுமதித்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications