வேலூர் துரைமுருகனின் வலதுகரம்.. பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் பரபரக்கும் ரெயிடு.. 3 காரில், 6 ஆபீசர்ஸ்
வேலூர்: திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்க துறையினர், இன்று காலையிலிருந்து திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலூர் மாவட்டத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு அமைப்பாளராக உள்ளவர் பூஞ்சோலை சீனிவாசன்.. திமுகவில் மாவட்ட பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவர் மூத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில், துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டார்கள். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
குடோன்கள்: அதேபோல, துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது மூட்டை மூட்டையாகவும். பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர். அதேபோல, வேலூர் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.
ரூபாய் நோட்டு: இதையடுத்து, கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவாகி, விசாரணையும் நடந்தது. பூஞ்சோலை சீனிவாசனுக்குப் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படிக் கைமாறின? தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தெல்லாம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். பள்ளிகுப்பம் நடு மோட்டூர் பகுதியில் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தி வருகிறார்கள்.
பரபரப்பு: இன்று காலை சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருடன் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிற்கு வருகை தந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சோதனை நடத்தி வருகின்றனர். 3 கார்களில் சுமார் 6 அதிகாரிகள் சிஆர்பிஎப் வீரர்களுடன் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் பாதுகாப்பு வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications