வேலூரில் யாரிந்த பெண்? புளிய மரத்தில் காதலியை கண்டதுமே டக்குனு முடிவெடுத்த காதலன்.. பரபர குடியாத்தம்
வேலூர்: வேலூரில் நடந்த துயர சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது?
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு.. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்... 2 மகன்கள் இருக்கிறார்கள்.. இந்துபிரியா என்ற ஒரே ஒரு மகளும் இருக்கிறார்.. பி.ஏ., பி.எட். படித்துள்ள இந்துப்பிரியாவுக்கு 25 வயதாகிறது.

இந்துப்பிரியா அதே கிராமத்தைச் சேர்ந்த மணிமேகன் என்பவரை காதலித்து வந்தார்.. 27 வயதாகும் மணிமேகன் எம்.ஏ., பி.எட் படித்திருக்கிறார்.. இருவருமே ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்பவும், இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டிலும் தெரியவந்தது. இதையடுத்து, பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் திருமணமும் நிச்சயமானது..
திருமண நிச்சயம்: அதன்படி வருகிற 10-ந் தேதி இருவருக்கும் திருமணம் செய்ய முடிவானது. அன்றைய தினம் காலையில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோவிலில் திருமணமும், மாலையில் பாக்கம் கிராமம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவானது.. இரு வீட்டினருமே இதற்கான திருமண பத்திரிகைகளை அச்சடித்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை இந்துபிரியா, தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்து பகுதிக்கு சென்றுவருவதாக வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி சென்றிருக்கிறார்.. ஆனால் அதற்கு பிறகு அவர் வீடு திரும்பவில்லை.. இதனால் பதறிப்போன பெற்றோர், தோட்டத்து பக்கம் சென்று பார்த்தபோது, அங்கிருந்த வயலிலுள்ள புளிய மரத்தில் துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி துடித்தனர்.
தற்கொலை: இந்த விஷயம் தெரிந்து, காதலன் மணிமேகன் ஓடோடி வந்தார்.. மரத்தில் காதலி பிணமாக தொங்குவதை பார்த்ததுமே, அதிர்ச்சியடைந்து நின்றார்.. பிறகு காதலியின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் அங்கிருந்த விவசாய கிணற்றில் ஓடிச்சென்று குதித்துவிட்டார்.. இதைப்பார்த்த கிராம மக்களும், உறவினர்களும் உடனடியாக கிணற்றில் குதித்து மணிமேகனை உயிருடன் மீட்டனர்...
இதுகுறித்து பாக்கம் விஏஓ வெங்கடாஜலபதி பரதராமி போலீஸில் புகார் தரவும், போலீசார் விரைந்து வந்து, இந்துபிரியாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையையும் தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்...
விசாரணை: ஆனால், இந்துப்பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று இதுவரை தெரியவில்லை.. திருமணம் நடைபெற ஒரு வாரமே இருந்த நிலையில் இந்த தற்கொலை பல்வேறு சந்தேகங்களை கிளப்பிவிட்டுள்ளது.. காதலியின் தற்கொலையும், இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த காதலனின் தற்கொலை முயற்சியும் என ஒரே நேரத்தில் நடந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications