வேலூரில் ஆட்கொல்லி சிறுத்தை! மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை கடித்து கொன்ற ஷாக் சம்பவம்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற இளம்பெண்ணை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
குடியாத்தம் கே.வி.குப்பம் பகுதியில் துருவம் எனும் கிராமம் இருக்கிறது. இங்குள்ள மக்களுக்கு மாடுகள் வருவாய் ஆதாரமாக இருக்கிறது. எனவே பெரும்பாலான மக்கள் மாடுகளை வளர்த்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள சிவலிங்கம் என்பவருக்கும் சொந்தமாக சில மாடுகள் இருக்கின்றன. இவருக்கு மொத்தம் 5 பெண்கள் உண்டு. 4 பெண்களை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். கடைசி பெண்ணாக அஞ்சலி 22 வயது இருக்கிறார்.

அஞ்சலி நேற்று காலை மாடுகளை மேய்க்க அருகில் இருந்த காப்பு காட்டுக்குள் சென்றிருக்கிறார். வழக்கமாக பொழுது இருட்டுவதற்குள் வீடு திரும்பிவிடுவார். ஆனால் நேற்று அப்படி நடக்கவில்லை. எனவே அவரை தேடி சிவலிங்கம் காட்டுக்குள் சென்றிருக்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, அஞ்சலி வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்திருக்கிறார்.
இதனையடுத்து ஊர் மக்களுக்கு தகவல் சொன்ன சிவலிங்கம், கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீஸ், அஞ்சலியை கொன்றது சிறுத்தை என்பதை உறுதி செய்திருக்கின்றனர். இதனையடுத்து அவரது உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்றிரவு ஆய்வு மேற்கொண்டார்.
#WATCH | Vellore, Tamil Nadu | Visuals from the spot where a 22-year-old woman, Anjali died after a leopard attacked her near her house in Durgam village, Gudiyatham, yesterday (18/12) pic.twitter.com/zS7Yl0p98u
— ANI (@ANI) December 18, 2024
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. உடனடியாக சிறுத்தையை பிடித்து விடுவோம் என்று கூறியுள்ளார். மாடு மேய்க்க சென்ற இளம்பெண் சிறுத்தை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் வேலூர் மாவட்டத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications