போலந்து நாட்டில் ஜூஸ் நிறுவனத்தில் வேலை பார்த்த தமிழக இளைஞர் படுகொலை
வேலூர்: போலந்து நாட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில் தமிழக இளைஞர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
சமீப காலமாக வெளிநாட்டிற்கு வேலைத் தேடி செல்லும் இளைஞர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது. அதற்கு வெளியுறவு துறை அமைச்சகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், போலந்து நாட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட தமிழக இளைஞரின் உடலை மீட்டு தரக் கோரி அவரது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஜூஸ் நிறுவனத்தில் பணி
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகேயுள்ள சாம்பசிவபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (25). இவர் டிப்ளமோ படித்திருந்த நிலையில், சென்னையிலுள்ள ஒரு ஏஜென்சி மூலம் போலந்து நாட்டிற்கு சென்றார். அங்கு, வெர்சா என்ற பகுதியில் ஜீஸ் நிறுவனம் ஒன்றில் பராமரிப்பு பணியில் சேர்ந்தார். கடந்த 45 நாட்களாக இவர் பணியாற்றி வந்துள்ளார்.

போலந்தில் பணி
ஏஜென்சி மூலம் ரூ.6 லட்சம் பணம் கொடுத்து வெங்கடேசன் பணிக்கு சேர்ந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெங்கடேசன் வீட்டிற்கு பேசாததால் அவரின் உறவினர்கள் செல்போனுக்கு தொடர்புகொண்டனர். ஆனால் வெங்கடேசன் தொலைபேசியை எடுக்காததால், அவரை பணிக்கு அனுப்பிய ஏஜென்சியை தொடர்பு கொண்டனர்.

சண்டையில் பலி
இதனையடுத்து, அவர்கள் மறு நாள் (திங்கட் கிழமை) விசாரித்த போது, வெங்கடேசன் தங்கியிருந்த அறையில் நடந்த சண்டையை விலக்க சென்றதாகவும், அப்போது, அவரை ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு
இந்தநிலையில், வெங்கடேசனின் மனைவி கலைச்செல்வி கைக்குழந்தையுடன் ஊர் மக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முரளியிடம் மனு அளித்தார். அதில், வெளிநாட்டில் கொலை செய்யப்பட்ட வெங்கடேசனின் உடலை மீட்டுத் தருமாறும், இறந்தவரின் குடும்பத்தினருக்கு, உரிய நஷ்டஈட்டை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை பெற்றுகொண்ட அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications