ஆம்பூர் ஏட்டு காளிதாஸ்.. வாணியம்பாடியில் வண்டியில் வந்தவருக்கு காத்திருந்த எமன்.. இப்படியா ஆகணும்
வேலூர்: திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவர் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் நாட்டறம்பள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தான் யாரும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்தது. அங்கிருந்த ஒரு தடுப்பு சுவர் போலீஸ் ஏட்டு காளிதாசுக்கு எமனாக மாறியது.
இரவு நேரங்களில் சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும்.. ஏனெனில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் தெரியாது. புதிதாக நீங்கள் செல்லும் சாலை என்றால் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சாலைகளில் பொதுவாக சிறிய பள்ளங்கள் அதிக அளவில் இருக்கும். திடீரென ஆங்காங்கே இருக்கும் பள்ளத்தை கவனிக்காமல் விட்டால் பெரிய விபத்திற்கு காரணமாகிவிடும்.

கார்கள், லாரிகள், பேருந்துகளை விட பள்ளம் நிறைந்த சாலைகள் இருசக்கர வாகன ஓட்டிகளையே பாதிக்க வைக்கிறது. அதேபோல் இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் சந்திக்கும் இன்னொரு சிக்கல் என்றால், அது சாலையில் உள்ள தடுப்பு சுவர் தான். தடுப்பு சுவரில் சிக்கி விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் வாணியம்பாடி பகுதியில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை கிராமத்தை சேர்ந்த 37 வயதாகும் காளிதாஸ் என்பவர் ஆம்பூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் வேலைக்கு சென்று வருவதற்காக நாட்டறம்பள்ளி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பணியை முடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் நாட்டறம்பள்ளிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
போலீஸ் ஏட்டு காளிதாஸ், வாணியம்பாடி- புதூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது திடீரென சாலையில் உள்ள தடுப்பு வேலி மீது அவரது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தலை மற்றும் முகம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த ஏட்டு காளிதாஸ், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த வாணியம்பாடி நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விபத்தில் உயிரிழந்த போலீஸ் ஏட்டுக்கு வளர்மதி என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications