Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் புதிய திட்டம்.. 35 சதவீதம் மானியத்துடன் கடன்.. தொழில் முனைவோருக்கு அருமையான வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஆதிதிராவிட, பழங்குடியின சமுகத்தை சேர்ந்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு கடன் வழங்கும் திட்டம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகும். இந்த திட்டப்படி வேலூர் மாவட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.5.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தொழில், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தொழிற்மையம் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு பல்வேறு திட்டங்களில் வங்கிகள் மூலம் கடனுதவி மற்றும் மானியம் வழங்கப்படுகிறது.

tn govt notification vellore loan

நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் போன்ற திட்டங்கள் மூலம் புதிய தொழில் முனைவோர்களுக்கு அவர்கள் தொடங்க உள்ள புதிய தொழில்களுக்கு ஏற்ப அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி வருகிறது. இதன் மூலம் புதிய தொழில் முனைவோர்கள் உருவாகி வேலையில்லாத இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்பதால் அரசு இந்த திட்டத்தை எல்லா மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

இதில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் என்பது ஆதிதிராவிட, பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டில் 15 பயனாளிகள் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் ரூ.5.5 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூர் மாவட்ட தொழிற்மைய அதிகாரிகள் கூறுகையில், ஆதிதிராவிட, பழங்குடியின சமுகத்தை சேர்ந்த ஆர்வம் உள்ள தொழில் முனைவோருக்கு கடன் வழங்குவதற்காக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 21 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வேளாண்மையை தவிர உற்பத்தி, வணிகம், சேவை சார்ந்த புதிய தொழில் தொடங்க கடன் உதவி பெற முடியும்.

புதிய தொழில் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 35 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதாவது அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை கடன் பெறலாம். மொத்த திட்டத்தில் 65 சதவீதம் வங்கிக்கடனும், 35 சதவீதம் அரசின் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக வேலூர் மாவட்டத்தில் இந்த நிதியாண்டில் 18 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 89 லட்சம் கடன் உதவியும், ரூ.2 கோடியே 6 லட்சம் மானியமும் ஒதுக்கப்பட்டது. இதுவரை 15 பயனாளிகள் 1 கோடியே 95 லட்சம் மானியத்தில் ரூ.5 கோடியே 57 லட்சம் கடனுதவி பெற்றுள்ளார்கள்

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் புதிய தொழில் முனைவோர்கள் ஆன்லைனில் விண்ணபிக்கலாம். பின்னர் விண்ணப்பித்த சான்றிதழ், திட்ட அறிக்கை உள்ளிட்டவற்றை வேலூர் காட்பாடி காந்திநகரில் இயக்கி வரும் மாவட்ட தொழிற்மையத்தில் நேரில் வழங்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழியும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்தத் தொழில் திட்டத்துக்கும் கடனுதவியோடிணைந்த மானியம் வழங்கப்படும். அது
உணவுப்பதப்படுத்தல், ஆயத்த ஆடைகள் தைத்தல், ப்ளை ஆஷ் செங்கல், சிமிண்ட் செங்கல், கயிறு மற்றும் கயிறு நார்சார்ந்த பொருட்கள், மளிகைக்கடை, வாணிகப் பொருட்களின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை, அழகு நிலையம், உடற்பயிற்சிக் கூடம், நகரும் அலகுகள் கொண்ட டிராவல்ஸ், காங்கிரீட் மிக்சர், ஆம்புலன்ஸ், ரிக் போரிங், ரைஸ் மில், ஆயில் மில் உள்ளிட்ட எந்தத் திட்டமாகவும் இருக்கலாம்.

இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் உதவி வழங்கப்படும். மானியம் மொத்த திட்டத் தொகையில் 35% ஆகும். மானிய உச்சவரம்பு ரூ.1.5 கோடி. இதுவன்றி, கடன் திரும்பச் செலுத்தும் காலம் முழுதும் 6% வட்டி மானியமும் வழங்கப்படும். தொழில் முனைவோர் தம் சொந்த நிதியில் செயல்படுத்தும் திட்டங்களுக்கும் மானியம் உண்டு.

இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணைதளம் வழியாக விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட தொழில் மையத்தையும் அணுகி முழு விவரங்களை அறியலாம். பட்டியல் மற்றும் பழங்குடி பிரிவினர் தொழில் தொடங்க சிறப்பான திட்டமான இந்த திட்டத்தை பயன்படுத்தி அவர்கள் தொழில் தொடங்கி முன்னேறலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+