தனி ரயில் பெட்டியில் கோடிக்கணக்கில் நகை, பணம் கடத்தல்... ரயில்வே ஐஜியிடம் சிபிஐ விசாரணை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்சியில் இருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் ரயிலில் தனிப்பெட்டி இணைக்கப்பட்டு, அதில் நகை பணம் கடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னை எக்மோர் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அதில் சேர்க்கப்பட்டிருந்த அந்த ஏசி பெட்டியை சோதனையிட்டு அதிலிருந்த நகைகள் மற்றும் பணக் கட்டுகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்தப் பெட்டியை ஐசிஎப் இடமிருந்து சிஆர்பிஎப் ஐஜி எஸ்.கே.பாரி பெற்றதும், அதில் அவரே நகை மற்றும் பணத்தை கடத்திச்சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ஐஜி பாரியிடம் சிபிஐ அதிகாரிகள் மட்டுமின்றி வருமான வரித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications