For Quick Alerts
For Daily Alerts
Just In
கட்டிங் பிளேயரில் மறைத்து நூதன முறையில் கடத்தல்... சென்னை அருகே 5.9 கிலோ தங்கம் பறிமுதல் - வீடியோ
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே நடத்தப்பட்ட வாகனச் சோதனையில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றில் அதிகளவு கட்டிங் பிளேயர்கள் இருந்தது போலீசாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கட்டிங் பிளேயரை ஆய்வு செய்தபோது கட்டிங் பிளேயரின் கைப்பிடியின், ரப்பர் உறைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வருவது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையில் உள்ள அவர்களின் கூட்டாளிகள் குறித்து தகவல் கிடைத்தது. இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் இதுவரை நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஒரு கோடியே 80 லட்சம் மதிப்புள்ள 5.9 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
chengalpattu chennai gold seized oneindia tamil videos செங்கல்பட்டு சென்னை தங்கம் கடத்தல் பறிமுதல் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
The Directorate of Revenue Intelligence (DRI) busted a gold smuggling gang, arrested four, and seized 5.9kg of gold worth Rs 1.8 crore on Friday. The smugglers concealed moulded gold bars by using them as handles of cutting pliers, a modus operandi spotted for the first time.
Story first published: Tuesday, November 8, 2016, 12:57 [IST]