டக்கென சேர் மீது ஏறி பெண்ஊழியர் மீது பாய்ந்த திருடர்கள்.. பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை பெசன்ட்நகரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் அலுவலகத்தில் பட்டப்பகலில் மர்மநபர்கள் சிலர், மானேஜரைக் கத்தியால் குத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அங்கிருந்த பெண் ஊழியர் ஒருவரிடமிருந்து தங்க செயினையும் அந்த கொள்ளைக் கும்பல் பறித்துச் சென்றது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், கத்திக்குத்து காயங்களுடன் கிடந்த மானேஜரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தற்போது அந்த திருட்டு சம்பவம் நடைபெற்ற போது, அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், வாடிக்கையாளர் போல் பேசிக் கொண்டிருக்கும் நபர் ஒருவர் திடீரென கத்தியோடு, பெண் ஊழியர் மீது பாயும் காட்சிகள் பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications