சென்னை நகைக்கடையில் 9கி. தங்கம் கொள்ளை... ஊழியரின் காதலிக்கும் தொடர்பா?.. வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அயனாவரத்தில் கோபாராம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீபாலாஜி தங்க மாளிகை கடை உள்ளது. இந்தக் கடையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்த்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தீபக் என்ற ஊழியர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடையிலிருந்த 9 கிலோ தங்க நகை மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணத்துடன் தலைமறைவானார். இந்த திருட்டு தொடர்பாக தீபக்கின் காதலி மற்றும் நண்பருக்கு தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications