For Daily Alerts
Just In
ஜல்லிக்கட்டு தடை.. நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்: வீரவிளையாட்டு சங்கம் அறிவிப்பு- வீடியோ
திருச்சி: தமிழ்நாடு வீரவிளையாட்டு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு பொதுக்குழுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வீரவிளையாட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில நிறுவனர் அம்பலத்தரசு, "மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றினால், அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைக்கும். ஆனால், அப்படிச் செய்யாமல் விளையாட்டு வீரர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினார். மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் தடுத்தால் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments
English summary
The Tamilnadu veera vilayatu peravai has warned the central government that if the ban on Jallikattu is not lifted then they will go for a country wide protest.
Story first published: Thursday, November 24, 2016, 18:48 [IST]