செல்லாக்காசு விவகாரம்.. நாடாளுமன்றத்திற்கு வராதது மோடியின் பொறுப்பற்றத்தன்மை: திருமா கண்டனம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: ரூ.500, 1,000 நோட்டுகளை செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய அக்கட்சித் தலைவர் திருமாவளவன், "மோடி அரசு அறிமுகப்படுத்திய புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கருப்பு பணத்தை பதுக்க வசதியாக இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகள் பிரச்னையால் மத்தியில் உள்ள இரு அவைகளும் கடந்த 6 நாட்களாக முடங்கிப்போய்விட்டன. இதுவரை மோடி அவைக்கு வரவில்லை. இது அவரது பொறுப்பற்றத்தன்மையை காட்டுகிறது. இனி வரும் கூட்டங்களிலாவது பிரதமர் மோடி கலந்துகொண்டு, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிப்பது அவசியம்" என்றார்.












Click it and Unblock the Notifications