கர்நாடகாவில் குடிக்கவே நீர் இல்லை.. முன்னாள் துணைமுதல்வர் ஈஸ்வரப்பா மதுரையில் தில் பேட்டி- வீடியோ
மதுரை: கர்நாடக மேலவையின் எதிர்க்கட்சி தலைவரும், பாஜகவின் முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கர்நாடகாவில் குடிக்கவே தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடக மக்களுக்கு கடும் மன வேதனை அளித்துள்ளது. இந்தப் பிரச்சினையில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கால சூழ்நிலை கடந்துவிட்டது. உச்சநீதிமன்றம் நிபுணர் குழு அமைத்து இரு மாநிலங்களுக்கும் அனுப்பி தண்ணீர் தேவை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார். தமிழகத்திற்கு எதிராக கர்நாடக எல்லையில் அம்மாநில அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகம் வந்துள்ள ஈஸ்வரப்பாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ:












Click it and Unblock the Notifications