விவசாயிகளைக் கேவலப்படுத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும்... ஈரோட்டில் சாலைமறியல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஈரோட்டில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் கருப்பண்ணன், 'தமிழக விவசாயிகள் கோடீஸ்வரர்கள், பைனான்ஸ் செய்கிறார்கள்' எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்தப் பேச்சைக் கண்டித்து ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேருந்து நிலையம் அருகே நூற்றுக்கான விவசாயிகள் கூடி சாலைமறியல் செய்தனர். அப்போது அவர்கள், "விவசாயிகளைக் கேவலப்படுத்திப் பேசிய அமைச்சர் கருப்பண்ணனை முதல்வர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், ஊடகங்கள் வாயிலாக தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications