For Quick Alerts
For Daily Alerts
Just In
வதந்திகளால் மன உளைச்சலில் கவுண்டமணி... சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்- வீடியோ
சென்னை: நடிகர் கவுண்டமணி இறந்துவிட்டதாக வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கவுண்டமணி சார்பில் அவரது வக்கீல் சசிகுமார் இந்தப் புகாரை அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "கவுண்டமணி. இறந்துவிட்டதாக சமூக வலை தளங்களில் திட்டமிட்டு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அவர் மன உளைச்சல் ஏற்பட்டு மிகவும் கவலையில் உள்ளார். எனவே சமூக வலைதளங்களில் இதுபோல் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.
Comments
goundamani health jaffna rumours police complaint oneindia tamil videos கவுண்டமணி வாட்ஸ் அப் பேஸ்புக் வதந்தி புகார் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
On behalf of comedy actor Goundamani, his lawyer K. Sasikumar lodged a complaint with the City Police Commissioner’s office seeking appropriate action against miscreants who spread the rumour that the actor was dead.
Story first published: Wednesday, November 23, 2016, 10:13 [IST]